புதன், 18 ஜனவரி, 2017

”அப்புக் காளைகளின்” உணர்வுப் போராட்டம் !The struggle for Jallikattu



எங்களால் நீங்கள் எங்களுக்காக நீங்கள் !



  "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." 

ஒட்டு மொத்தத் தமிழக மக்களின் மனமாக ஜல்லிக்கட்டு நீங்கா இடம் பெற்று விட்டது .முதன் முதலாக ஒரு நல்லுணர்வை பரப்பும் பணியில் மிகப்பெரிய வளைத்தளங்கள் அற்புதம் செய்து இருக்கிறது.எந்தத் தலைமையையும் உள் நுழைக்காமல் ஓடிப்போங்கள் என்று உதறி விட்டு , யாரையும் நிர்பந்திக்காமல் உனக்கு விருப்பம் இருந்தால் வந்து கலந்து கொள் என்ற தன்னெழுச்சி உணர்வுக்குச் சிவப்புக்கம்பளம் விரிக்கும் இளைஞர்கள் குரல் உலகத்தைத் திரும்ப மட்டுமல்ல திரும்ப வைக்க மட்டும் வைக்கவில்லை ’எங்கெல்லாம் அந்த உணர்வு மேழெழுகிறதோ அங்கெல்லாம் நடத்தத் தூண்டு கோலாகிவிட்டது . 

"நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் என்ற இளைஞர்களைப் பற்றிய விவேகானந்தரின் நம்பிக்கை ஆன்மாச் சுடர் விட்டு நிற்கிறது ."என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசைக் கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலைச் செய்யுங்கள். ”

என்பதான விவேகானந்தரின் ஒரு யோகியின் ஆசை நிறைவேறும் அடையாளமாக ஜல்லிக்கட்டுத் துவக்கமாக நிற்கிறது . 

     இனச்சேர்க்கைக்கு விடப்படும் பொலிகாளை என்ற  பூச்சிக்காளையை காப்பது மட்டுமல்ல இந்த போராட்டத்தின் முன்னுரை .அதைப்பற்றிய விசயங்களை வளர்ப்பவர்களை விட அதை விரட்ட நினைக்கும் அறிவாளிகள் நிறையப் பேசி விட்டார்கள் .நமக்கு இங்கு பேச எதுவுமில்லை . 

இன்றைய இளைஞர்கள் எப்படிப்பட்ட சக்திகள் என்று காட்ட ஒரு தருணத்தைத் தனக்குத் தெரியாமல் நெருப்புச் சுடும் என்று தெரியாமல் கட்சிகளும் , நாட்டை நிர்வகிக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நாடாளும் அரசியல் தன்னலமே வாழ்வெனப் புளுகும் அரசியல் பொய் மூடைகளுக்கும் இந்த எச்சரிக்கைக் காது மடலைச் சூடாக்கியிருக்கும் .இனி வருங்காலத்தில் எப்படித் தடுக்கலாம் என்று மந்திராலோசனையில் மூழ்கியிருக்கலாம் ! ஆனால் உங்களுக்குப் புரியப் போவதில்லை ஒரு நாளும்.நீங்கள் முந்தியத் தலைமுறையை இலவசங்களிலும் , சினிமாக் கவர்ச்சி வாசத்திலும் ,திராவிடன் என்ற உணர்ச்சி முலாம் தடவி விசங்களை ஊட்டி வளர்ந்தவர்கள் .நீங்கள் திருந்த வாய்ப்பு இல்லை .உங்களுக்குள்ளும் அப்படிச் சொல்லித்தான் வளர்ந்து விட்டீர்கள் .  பாவம் என்ன செய்ய ? 


  2014 வரை மதுரை மண்ணில் நடந்த ஜல்லிக்கட்டில் 'அப்புக் காளை' ஒன்றே ஒன்றுதான் இருந்தது .ஆனால் இன்று உலகமெங்கும் அடங்காத திமிர் படைத்த அல்ல ’திமிழ்’ கொண்ட இளைஞர்கள் பட்டாளம் பொறுமைக் கடந்து சுனாமியாய்க் கரையேறி நிற்கிறது . இங்குத் தன் மண்ணை நேசிக்கும் ,தன் மரபைக் காக்கும் ,தான் உண்டு வளர்ந்த இன்னொரு தாயான பசும்பால் வீர்யம் தன் மரபில் ஊறி நிற்கும் இருக்கும் ,இந்தச் சமூகம் என் சமூகம் என் உரிமை எவனோ நிர்ணயம் செய்யக்கூடாது ,என் கலாச்சாரம் , என் அடையாளம் ,என் முகம் . அதை அழித்து விட்டு உங்கள் சட்டம் முன் மண்டியிட நாங்கள் தேசக் குற்றவாளிகள் இல்லையென்ற உரத்தக் குரலோடு அற வழியில் களம் இறங்கி இளைய சமுதாயம் தெருவில் இறங்கி இரவு பகல் பார்க்காமல் கிடக்கிறது  .முடிந்தால் சட்டத்தின் கட்டுத்தரைக் காம்புக்கயிறுகளை அவிழ்த்து விடுங்கள் .அவர்கள் காத்திருப்பது காளைகள் எதிர்காத்திற்காக மட்டுமல்ல இனி வரும் எதிர்காலத்தின் நம்  உரிமைக்காக  .

அவர்களுக்குத் தோள் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை . எங்கள் இன்றைய காவல் துறைப் போலக் கைக் கட்டி நில்லுங்கள் . ஏனெனில் முதல் முறையாகத் தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனின் குடும்பமும் அவர்கள் பின்னால் தோள் கொடுத்து நிற்கிறது .என் பையன் ,பெண் வீட்டில் பொறுப்பில்லை என்று நொந்து போயிருகிறேன் ஆனால் எனது இரண்டு தலமுறைகள் செய்யாத என் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தர வீதியில் கிடக்கிறான் .இந்தப் போராட்டம் கடந்த காலத் தலைமுறையின் அடங்காக் கோபத்தின் வலிக்கு மருத்துவத்திற்கான தேவை மட்டுமில்லை. வருங்காலத் தலைமுறையின் முள்பாதைகளைச் செப்பனிடும் பணி என்று புரிந்து வைத்து இருக்கிறார்கள் . 


2017 இளைஞன் இனி எப்போதும் பேசப்படுவான் ! என்று ஒரு வீட்டில் இளைஞன் புரிந்து கொள்ளப்பட்டானோ அன்றே அந்நாட்டின் சுதந்திரம் புதிப்பிக்கப்படும் பணித் துவங்கி விட்டது என்று பொருள் .

  1947 க்கும் முன்னும் இதுதான் நடந்தது ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக