செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சொந்த நாட்டின் அகதிகளா நாம் ?



          கர்நாடகாவில் வயசுப் பார்க்காம அடிக்கிறார்கள் ,போகிற வண்டிகளைக் கொளுத்துவது ,கண்ணாடியை உடைப்பது எல்லாம் எதைக்காட்டுகிறது ? 

தமிழ் பேசுவதாலா ,தமிழென்பதாலா ,தண்ணிக் கேட்டதாலா எது காரணம் ? 

       வன்முறை கையாலாகதாவன் , தன்னை நேசிக்கத் தெரியாதவனின் கடைசி ஆயுதம் .

           முன் எப்பொதும் இல்லாத அளவுக்குச் செய்திச் சேனல்கள் எல்லா வன்முறைகளையும் பதிவு செய்கின்றன.அவர்கள் பதிவு செய்யாது போனாலும் அவை நடக்கத்தான் செய்யும் . 

           சொந்த நாட்டுக்குள் நதியின் பாதையை ஒரே தேசம் என்று பேச முடியாத நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டு இருப்பதில்லை .ஒட்டு மொத்த தமிழகமே ஜாதிவாரியாக அடித்துக்கொண்டாலும் மொழிவாரியாக எப்போதும் பிரித்துப் பார்ப்பதில்லை. 

            தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . தென்னகம் ஒரே மொழி பலவாறாகப் பேசப்படுகிறது .எனவே இங்கு மொழி பிரச்சனையில்லை .அரசியல் நம்மைப் பிரிக்கிறது .எந்த அரசியல் நம்மை ஆள்கிறதோ அந்த அரசியல் நம்மை நம் ஒற்றுமையைத் தோற்கடித்துக்கொண்டு இருக்கிறது .எங்கிருந்து வந்தாலும் ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்க்கும் நாம் நம் கட்டிலில் இடமில்லாமல் தூக்கத்தைத் தொலைத்து விட்டு அனாதையாக ஏன் நிற்கிறோம் .நம்மிடம் தன்னிறைவு இல்லை .

            காசு பணம் சம்பதிக்க மாவட்டம் விட்டு மாவட்டம் போவது போல இனி மாநிலம் விட்டு மாநிலம் போக நமக்கு விதியில் எழுதவில்லை .தமிழகம் கரைதப்பியக் கப்பல்களுக்கே வழிகாட்டியாக இருக்கும் போது வெறும் உரிமைகளுக்காகக் கையேந்தி நிற்கக் காரணம் நம்மிடம் எல்லாம் இருந்தும் நம்பிக்கைப் பொய்த்து வருகிறது .நாம் இந்தியர்கள் என்பது எப்போதும் மாறாத பெருமைக்குறியதுதான் .

             ஆனால் நம் அடையாளம் காக்கப்படவேண்டுமென்றால் .நம் சமூகம் பின்னோக்கியப் பார்வையில் நாம் இழந்த விசயங்களை மீட்டெடுக்க வேண்டும் அது நம் பாண்பாட்டில் புதைந்து கிடக்கிறது .‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் நமக்கு வேண்டும் .


           தமிழ் தொடர்பு மொழியல்ல பண்பாட்டின் அடையாளம் .இருப்பதைக் குறை சொல்லிச் சமூகத்தைத் திருத்துகிறேன் என்ற பெயரில் கடந்த ஐம்பது வருடமாக நாம் இழந்தது நம் வழிபாடுகளை .பெற்றது நாத்திகம் என்ற அவசர வழிகளைத் தலைவாசலாக்கிக் கொண்டதுதான் .தவறு என்பது வழிபாடுகளில் நடந்த குறைகள்.நம் வழிபாடுகளில் குறை இல்லை .அதனைத் தனது நலனுக்காகத் தூக்கிப்பிடித்த சில சக்திகள் செய்தத் தோற்றப்பிழை .அதை மட்டும் உதறி விட்டுப் போகத்தெரியாமல் மொத்தமும்  வேண்டாம் என்று ஒதுக்கி விட்டோம்.அப்படி ஒரு மக்களை உருவாக்கவே கூடாது .

           நம் வழிபாடுகள் இயற்கையோடு கைகோர்த்துப் போகத்தெரிந்த மாபெரும் தவம். .இனி தமிழ் பண்பாட்டின் கூறுகளை எழுதுவோம் ,படிப்போம்,சிந்திப்போம் ...நாம் நம் சிந்தனைகளில் வளம் பெற உறுதிகொள்வோம் .நம் சந்ததிகளை தமிழ்நாட்டின் முதுகெழும்பாக மாற்றுவோம் .நம் குலதெய்வங்களான நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள் .இந்த அரசியல் ,சட்டம்,பிழைப்பு எல்லாம் ஒரே பொருளாக மாறட்டும் .யாரையும் ஒதுக்க வேண்டாம் .நம் வேலை மீட்டெடுப்பது என்ற சபதம் மட்டுமே .இந்தியாவிற்குள் தமிழகம் என்பது தமிழகத்திற்குள் இந்தியா என்று கௌரவம் பெறட்டும் நம் நாடு .நம்புவோம் .

தோற்றுப்போகாத சரித்திரம் தமிழின் சரித்திரம் .தமிழ் இயற்கையின் கொடை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக