சனி, 9 ஜூலை, 2016

”பேய்” நல்லதுத் தெரியுமா ?




                           தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் ! கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற கான்செப்ட்டை வைத்துப் படப் பண்ணும் ’பேய்க்கதைக்கரு’ நல்லா வேலை செய்கிறது .பொதுவா மேக்கப் இல்லாமல் சும்மா நடிச்சாலே பேய் மாதிரி இருக்கும் நடிககைகள் இதற்கெனெப் பிரத்தியோகமாகக் கயிற்றில் தொங்கி வேறு பயமுறுத்துகிறார்கள் . இதெல்லாம் விட எங்கும் கொலை,கொள்ளை நடக்கவில்லையென்றால் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சேனல்கள் அந்தக் கேரக்டர் பேய்களிடம் போய்ப் பேட்டிக் காணத்தொடங்கி விடுகிறார்கள் .

          கேள்வி : இந்தப் படத்தில் நடித்த உங்க அனுபவம் எப்படி எங்கள் நேயர்களுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்த பதில் தெரியாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த நாள் சூரியனே வரமாட்டர் என்பது போல கேட்க,

         பதில் : நல்லாத் தமிழ் பேசத்தெரிந்தாலும் அந்த நடிகை,” யா, யா திஸ் இஸ் மை கிரேட் எக்ஸ்பிரியன்ஸ் யு நோ “என்பார்களே அப்போது அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக  நம்ம ஊர் முனியே சமத்துன்னு தோணுது . அது பாட்டுக்கு இரவு பண்ணிரெண்டு மணிக்கு மட்டும்தான் டாண்ணு வந்துட்டு, போய் விடுமாம்

                 ஒருபக்கம் நல்ல பேய்கள் ’டாய், பூய் ‘ன்னுக் கத்திக்கொண்டு கெட்ட வேலைகள் செய்கிறது. கெட்டப் பேய்கள் பழிவாங்கித் தீருவேன் என்ற கட்டிப்புரண்டு அழுகிறது .பேய்கள் மேல் உள்ள வீண் பயம்  தொலைந்துப் போவது நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் பேய்கள் பற்றி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அபாய முயற்சியில் தமிழ்ப் படங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது .


                            இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் தூக்குப் போட்டுச் செத்துப்போன , மருந்துக் குடிச்சு மாய்த்துக்கொண்ட, பெண் பேய்களை பசங்க தேடி போகும் பெருத்த அபாயம் தமிழ் சமூகத்திற்கு வாய்க்கலாம் .இனி என்ன பண்ணி என் மகனை மயக்கினாலோ என்று மருமகளைக் குறை கூறும் மாமியார்கள் கூப்பாடுப் போய், என்ன செய்து அந்தப் பேயை மயக்கினானோ என் பையன் என்று அழுது சாதிக்கலாம்.காரணம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சமூகத்துக்குச் செய்யும் மிக்கபெரிய நன்மை பேய்கள் கிளாமராக இருந்தே ஆக வேண்டும் என்ற தரையில் விழுந்துப் புரள்கிறார்கள்.தல கூட நடிச்சாலும் தளபதி கூட நடிச்சாலும் கிளாமர்தான் தலைவிதின்னு ஆணாதிக்க ஓவர்டோஸ் தாங்க முடியாத நம் தமிழ் நாயகிகள் பேய்களாக மாறிக் கிளாமரில் அள்ளிக்குமிக்கிறார்கள்! அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது !. 

                     நம்மத் தமிழ்ப் படத்தில் செத்துக் கொடுத்தான் சீதக்காதி என்பது கீழக்கரையைச் சேர்ந்த வள்ளலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பேய்களைத் துரத்தி துரத்திக் காட்டுகிற இயக்குனர்களுக்குப் பொருந்தும் ! உண்மையிலேயே பேய் பற்றிய அனுபவம் உள்ளவங்ககிட்டக் கேள்வி ஏதும்  இல்லாம அவங்க சொல்றதைக் கேட்டா சவுண்ட் எஃபக்ட்டோட கதை விடுவார்கள் .ஆனால் அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்கன்னு கடைசியிலக் கேட்டா முதல்ல இருந்து அதே கதையைச் சொல்ல ஆம்பித்து விடுகிறார்கள்..
 .. 


இந்தப் பேய் சமாச்சாரங்களால் நடந்த நல்ல விசயங்கள் சிலவும் உண்டு தெரியுமா உங்களுக்கு ? 

1. குழந்தைகள் இப்போதெல்லாம் சோறு சாப்பிடும்போது அம்மா சொல்லும் பூச்சாண்டிக்குப் பயப்படுவதேயில்லை .அது மட்டுமல்ல குழந்தை அப்பாவையும் பூச்சாண்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கிறது.  

2.  ஸ்கூல் பசங்க இப்போல்லாம் அதைப்படி இதைப்படின்னுப் பயமுறுத்தினா ஏதாவது நிராசையிலச் செத்துப்போன பேய்ப் படப் பேர் சொல்லிப் பெற்றொர்களைப் பதிலுக்குப் பயமுறுத்துகிறார்கள். 

3. காதலில் தோற்றுப்போய்  யாரயோ திருமணம் செய்தவர்கள் இப்போதெல்லாம் நீண்ட நாள்  ஞாபத்தில் வைத்து அவஸ்தப்படுவதேயில்லை .காரணம் தெரியாத பிசாசை விடத் தெரிந்த பேயே பெட்டர்ன்னு மனதைத் தேற்றிகொள்கிறார்கள் . 

4. வீட்டுப் பெருசுகளோட காலத்தில், ஜெயமாலினி போல வயதான நடிகைகள் பேயாக அடுப்புக்குள் கால்வைத்து எறித்துக்கொண்டு சிரித்த காலம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ,செம ஹாட்டான பேயாக த்ரிஷா. ஆண்ட்ரியா ,லட்சுமிராய் போன்ற கலைச்சேவகப் பேய்களால் கிறங்கடிக்கப்படும் பாக்கியம் பெற்று இருகிறார்கள் . 

5. மிக முக்கியம் எல்லோருக்குமான நன்மையான இன்னொரு விசயம் ! தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி - மோகினி என்று என்  கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் ! . பெரிய பட்ஜெட் படமாம் லண்டனிலில் தயார் ஆவதால் இதற்கு நாம் அடிமைப்பட வாய்ப்புகள் எக்கசக்கம் ! 

சரி அவர்கள் கலைச்சேவை ஒருபக்கம் கிடக்கட்டும் .

உண்மையிலே பேய் இருக்க்க்க்க்க்கா ……?  

                        எனக்கும் இது தேவையான்னு தோணிச்சு. ஆனால் ஏதாவது ஒரு மெசேஜ் இந்த சமூகத்திற்கு வழங்கச்சொல்லி உள்ளுணர்வு சொல்லியதால் தட்டாமல் அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன். 

”பேய்” நல்லது.. இரண்டாம் பாகம், திங்கள் கிழமை உங்களைப் பிடிக்க ! ... வரும் !!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக