வியாழன், 7 ஜனவரி, 2016

பாவம் பசங்க !


           

சில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாகி விடுவான் இது நாளடைவில் அதிகம் ஆனது , 
அவன் அமைதியற்ற நடவடிக்கைச் சில சமயத்தில் எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது .ஏதோ ஒரு மன அழுத்தம் இருக்கும் பெரிய மனிதர்களைப் போல இருந்தது அவன் நடவடிக்கை. 
            
     வீட்டில் ஒருவேளை அவனுக்குச் சில மணிநேர யாருமில்லாமல் தனியாக இருப்பதோ வேறு எதாவது சூழ்நிலையைக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் அருகில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியுசன் அனுப்பினோம் அங்கு இவன் வீட்டுப் பாடங்களை மட்டுமே செய்வான் .இதிலும் பெரிய மாற்றமில்லை. இப்போது அவனோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கவனிக்கத்தொடங்கிய போது எவ்விதக் காரணமும் இல்லாமல் கண்களை அதிகம் முறை மூடி முடித்திறப்பது போலச் செய்யத் தொடங்கினான் .இன்னும் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது .’மேனிக் டிப்ரசன்’ மாதிரி இருக்குமோ ? என்ற சந்தேகம் வரவே அருகில் உள்ள குழந்தை மருத்துவரிடம் சென்ற போது அவர் ஒருவேளை நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என்று ஒருமாதம் மாத்திரைகள் கொடுத்தார் .அப்படியும் பெரிய முன்னேற்றமும் இல்லை. 

கடந்த வாரம் ஒரு நாள் என்னிடம் அவன் வகுப்பு ஆசிரியை அவனிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ,அவனைக் கண்டால் பிடிக்கவில்லை என்று சொல்வதாகச் சொன்னான் .அவன் அம்மாவிடம் இது மாதிரிச் சொன்னதாகச் சொன்னேன் . ஆமாம் நான் ஒருமுறை சொன்ன போது என்ன என்னுடைய ”மிஸ்” மாதிரியே நீயும் என்னப்பார்த்தாலே பிடிக்கவில்லை என்று என்னிடம் கூடச் சொன்னான் என்றார் மனைவி . 

எனக்குப் பொறித் தட்டியது. அவன் அந்தப் பள்ளியில் அவன் எல்கேஜி முதல் படித்துக்கொண்டு இருக்கிறான். சரி எந்த ஒரு ஆசிரியைப்பற்றியும் இப்படிச் சொன்னதேயில்லை . நேரில் சென்று அவனுடைய வகுப்பு ஆசிரியைப் பார்க்க முடிவு செய்த போது மனைவி தடுத்தார்.அப்புறம் வேண்டுமென்றே அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் என்ன செய்வான் ? என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக ! . 

ஆனால்
 அடுத்தடுத்து அங்கு நடந்த இரு நிகழ்ச்சிகள் என்னை நிர்வாகத்தின் வாசலை கொஞ்சம் வேகமாகச் சென்று மிதிக்க வைத்தது விட்டது ! 

இந்த வாரம் அவன் செய்து கொண்டு சென்ற ”ப்ராஜெக்ட்”கசக்கிக் குப்பையில் வீசப்பட்டது .அடுத்து இன்று மாலை ஒரு வகுப்பு நேரம் முழுவதும் வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கிறான் .
அடுத்த வகுப்பான ’ஸ்கேட்டிங்’ போக முடியாத அளவுக்கு அது அவனைப் பாதித்து இருகிறது . 

அவனிடமே கேட்டேன் அப்பா பள்ளிக்கு சென்று சண்டைப் போடமாட்டேன் என்ன காரணம் என்று விசாரிக்கிறேன் என்றேன் .அரை மனதாக ஒத்துக்கொண்டான். ஆனால் அன்றுதான் போகிறோம் என்று அவனிடம் சொல்லாமல், மனைவியைப் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனேன் . 
போகும் போது மனைவியும் தயக்கத்துடன் என்ன பேசப் போகிறீர்கள் ? என்றார் . 

யார் மீது தவறு இருக்கிறது என்பதைச் சரி செய்யவே போகிறோம் அங்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றேன் . 
பள்ளியின் முதல்வரை காத்து இருக்க வைத்து அனுமதித்தார்கள் அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு ஆன்மீக அறக்கட்டளைக்குக் கீழ் செயல்படுகிறது. 

எங்களை விசாரித்த பள்ளியின் பெண் முதல்வர் முதலில் கேட்ட கேள்வி , 
என்ன நடந்தது? 
நான் பேசினேன் , 
எனக்கு உங்கள் பள்ளி நிர்வாகத்தின் மேல் எனக்குப் பிரச்சனை இல்லை .நான் இப்போது இங்கு வந்தது உங்கள் ஆசிரியர் யார் மீது புகார் கொடுப்பதிற்கில்லை.இந்த வகுப்பில் படிக்கும் எங்கள் பையன் சமீபத்தில் சில நாட்களாக வரும் அவனது நடவடிக்கையும் கடந்த சில நாளுக்கும் முன் உச்சகட்டமாக அவன் செய்தித் தாள் மூலம் செய்த “ப்ராஜக்டை”கசங்கி குப்பையில் வீசியதையும்,நேற்றுப் பக்கத்திலிருக்கும் பையனோடு பேசியதால் அந்த வகுப்பு முழுதும் வகுப்புக்கு வெளியே நிறுத்தித் தண்டித்ததையும் சொன்னேன் .குறிப்பாக அவன் வகுப்பு ஆசிரியை அவன் மீது ஏதோ கோபமாக இருப்பதை அறிந்துக் கொள்ளாவே நாங்கள் வந்து இருபதாக அழுத்திச் சொன்னேன் . 
அவர் ஆச்சர்யபட்டார் .இப்படி எங்கள் பள்ளியிலா ? என்னால் நம்பமுடியவில்லை .அது மட்டுமல்ல அப்படி நடந்து இருந்தால் அது தவறு தவறுதான் .குழந்தைகளைக் கண்டிக்கச் சொல்கிறோம் தண்டனைக் கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்றார் . 
மேலும் பேசிய அவர் , 

இது 1044 பெண்களும் ஆண்களும் இணைந்துக் கல்விப் பயிலும் இடம் .அதனால் ஒவ்வொரு நாளும் எல்லாக் குழந்தைகளும் பள்ளியிலிருந்து அனுப்பி வைத்த பின்தான் நிம்மதி அடைகிறோம் .அந்த அளவுக்கு இந்த வருடம் எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றார் 
அதற்கு அவர் எனக்கு என் பிரச்சனையை விடப் பெரிதாய்த் தெரிந்தது .ஒரு பாலசந்தர்ப் படத்தில் சொன்ன மாதிரி ஒரு பெரிய கோட்டை அழிக்க அதற்குப் பக்கதில் அதைப் பெரிய கோடு போட்டு சின்னதாக்குவது போல இருந்தது! 
போன வாரம் என்னுடைய டேபிள் உயரம் கூட வளராத யுகேஜிப் பையன் அவன் வகுப்புப் பிள்ளையைக் காதல் பண்ணுவதாகச் சொன்னதாக ஒரு புகார் வந்தது,நான் அதிர்ந்து போய்விட்டேன் . கூப்பிட்டு எப்படி அவன் காதலைப் என்ன புரிந்து வைத்து இருக்கிறான். என்று விசாரித்து நீ காதல் பண்ண வேண்டியது உன் அம்மா அப்பா நண்பன் எல்லோரயும்தான் என்று சொல்லி அனுப்பினேன் .வேறு என்ன சொல்ல ? என்றார்ச் சிரித்துக்கொண்டே . 
இப்படி அது, இது, எது ? என்பது போலப் பல பிரச்சனையைப் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் பையன் பிரச்சனையை நான் உடனே கவனிக்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வீட்டுக்குப் போங்கள் என்றார் . 
விடைபெற்றோம் . 

மனைவிக்குச் சமாதானம் ஆகவில்லை என்பதை முகம் சொல்லியது . 
இன்னும் நான் அவர்களை அக்னிப் பரீட்சையில் நாஞ்சில் சம்பத்தைக் கேட்டது போலக் கேட்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ ? 


அடுத்தச் சில நாளில் எனக்குச் சில வேலைகள் இருந்ததால் பையனை அழைக்க அவன் அம்மா போயிருக்கிறார் . 
அந்த வகுப்பு ஆசிரியைத் தானே என் மனைவியை காத்து இருந்து சந்தித்து ,
நான் இங்குப் பத்து ஆண்களாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன் .இப்படி யாரும் என்னைப்பற்றி நேரடியாக நிர்வாகத்தில் சொன்னதே இல்லை .நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டாராம் . 
என மனைவிக்குச் சின்னச் சந்தோசம். 
வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசி விட்டு வந்து விட்டார்

 பெற்றவர்களுக்குப் பாசம் !

ஆசிரியைக்குக்கு கௌரவப் பிரச்சனை !

பள்ளி நிர்வாகத்திற்கோ பள்ளியின் பெயர் மேல் அக்கறை !

மூவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு ,பசங்க படும்பாடுதான் பாவம் !! 

1 கருத்து:

  1. எதையும் மனதிற்குள் வைத்து புலம்பிக்கொள்வதே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம், ஆனால் முகத்திலடித்தமாதிரி எல்லோருடனும் பேசிக்கொள்ளவும் முடிவதில்லை...

    பதிலளிநீக்கு