சனி, 21 பிப்ரவரி, 2015

ஜகி வாசுதேவ் சந்தித்த அயல் கிரகவாசிகள் !



செவ்வாய்க் கிரகத்தின் ஏவாள் !



செவ்வாய்க் கிரகத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்டுவதாகப் பிரிட்டனைச் சேர்ந்த பெண் Maggie Lieu விருப்பம் தெரிவித்துள்ளார் அவர் செவ்வாய்க் கிரகத்தின் முதல் ஏவாளாக ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை .ஆனால் அதர்க்கு ஆகும் செலவு ? .அந்தக் கவலையும் வேண்டாம் .அத்தனை செலவையும் - செவ்வாய்ப் கிரகத்தில் மக்களை 2025 ல் குடியேற்றும் திட்டத்தை என்ற பெயரில் 36 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் ”முதல் செவ்வாய் (Mars One)” என்ற டச்சு நிறுவனம் அறிவித்துள்ளது அதன் மூலம் செவ்வாய்க்குப் போகும் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள 5 மாதத்தில் மட்டும் உலகத்தின் 140 நாடுகளைச் சேர்ந்த 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர் தேர்வு செய்யப்பட்ட முதல் நூறு நபர்களில் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசப்படும் Maggie Lieu யும் ஒருவர் . 



ஆயுள் முடிந்தவுடன் ?

                   அந்த 100ல் இந்தியர்கள் மூவரும் அடங்குவர் (கேரளத்தைச் சேர்ந்தவர். 19 வயது, சாரதா ப்ரசாத். இன்னோருவர் தரண்ஜித் சிங். வயது 29. அமெரிக்காவில் இருக்கிறார். மூன்றாமவர் கீர்த்திகா சிங். வயது 29. துபாயில் இருக்கிறார்.) இவ்வறு இறுதியாக இந்த நூறு நபர்களில் வடிகட்டி 24 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்த 24 பேருக்கும் ஏழு ஆண்டுக்காலப் பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொடங்கி 26 மாதங்களுக்கு ஒரு முறை நான்கு பேர் வீதம் அனுப்பப்படுவர்.ஒவ்வொரு 4 பேரும் செவ்வாய்க்குச் சென்று இறங்கப் பயணக் காலம் சுமார் 7 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரை ஆகும்.இதுவரை இங்குப் போவதர்க்கு இனிமேல்தான் கோள்களுக்கிடையிலான ஊடக் குழுமம் (Interplanetary Media Group) பிரமாண்டமான திட்டத்தைக் தயார் செய்யப் போகிறார்கள் என்பதை விட இங்குப் போனவர்கள் திரும்பி அழைத்து இதுவரை வர எந்தத் திட்டமும் இல்லை அங்கேயே ஆராய்ச்சி,அங்கேயே ஆயுள் முடிந்தவுடன் குழிபறித்துச் ’சுவாகா’ செய்யலாம் ! 





செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் !
 
ஆனால் செவ்வாய்க் கிரகத்தைச் (Mars Orbiter Mission) நமது மங்கள்யான் 2014 செப்டம்பர் 24 முதல் அந்தக் கிரகத்தைச் சுற்றிச்,சுற்றிச் படமெடுத்து அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறது . இதர்க்கு ஒரு படி மேலே போய் அமெரிக்காவின் மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி, என்ற களம் அங்கு இறங்கியே வேலைச் செய்து கொண்டு இருக்கிறது அங்குள்ள மவுன்ட் ஷார்ப்பில் இருக்கும் பாறைகளின் தன்மையை 2.6 அங்குல அளவு ஆழத்திற்கு ஒரு துளையிட்டு அதிலிருந்து சில துகள்களை ஆய்வுக்காக எடுப்பதுவும், பல மிக முன்னேறியத் தொழில் நுட்பப் கேமிராக்களின் மூலம் படம் பிடித்து ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது.இவை அனுப்பும் படங்கள் தினமும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி வருகின்றது அதில் குறிப்பிடும்படியாய்ச் செவ்வாய்க் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரலை ஒத்தப் பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 
            செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அதோடும் விடவில்லை அங்கிருந்து வந்த பல படங்கள் மிக சாதரணமாகப் பிற கிரக மனிதர்களின் நடமாட்டத்தைச் சொல்கிறது .




இங்கு இதுதான் விசயமே, வேற்று உலகில் மனிதத் தொடர்பை விரும்பி அமெரிக்கா உட்பட ஐரோப்பா ,ஆசியா முன்னனி நாடுகளும் தனது நாட்டின் பாதுகாப்புக்கு அடுத்துப் பட்ஜெட்டில் இதர்க்குத்தான் கொட்டி, கொட்டிச் செலவிடுகிறார்கள்.இவர்கள் Search for Extra Terrestrial Inteligence என்ற அமைப்பில் கீழ் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மூலம் Observatory வைத்துப் பிரபஞ்சத்தைச் சல்லடைப் போட்டுச் சலித்து வருகிறார்கள் அதர்க்காகப் பில்லியன் கணக்கில் யூரோக்களையும் ,டாலர்களைக் கொட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் .

வார்ம் ஹோல் ?


                அவர்கள் விரும்புவது ஒரே ஒரு செய்தி வேற்றுலக வாசிகளுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு .அயல் கிரகவாசிகள் அவர்கள் எங்கு இருந்து வருகிறார்கள்,அவர்கள் தெரிந்து இருக்கும் பயணிக்கும் பறக்கும் இயந்திரங்கள் வார்ம் ஹோல் போன்ற அறிவியல் நுட்பம் வாய்ந்ததா ,அவர்களால் நன்மையாத் தீமையா? பூமிக்கு வருவதன் நோக்கம் என்ன அது நல்லதாக் கெட்டதா இப்படிப் பல கேள்விகளைத் தனக்குத்தானே நிர்ணயித்துக் கொண்டு தேடுகிறார்கள் .ஆனால் சில இது வரை கிடைத்த ஆதாரங்கள் இன்னும் பல கேள்விகளைத்தான் விதைக்கிறதே தவிர எதையும் தீர்மானிக்க முடியவில்லை.


மீண்டும் எட்வர்டு ஸ்னோடென் ?
     
       இதை விடப் பெரிய விசயம் 1955 ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 11 ஆம் நாள் நியு மெக்ஸிக்கோவில் உள்ள AFB Holloman விமானப் படைத்தளத்தில் சந்தித்துள்ளார் எனவும் அப்போது அவர் வேற்றுலுக வாசிகளுடன் டெலிபதி மூலம் பேசி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் சந்தித்துள்ளார் என்பதைச் சொல்கிறார்கள் அதுவும் மூன்று முறை .இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாயே திறக்காத அமெரிக்கா அதிலும் தனது ரகசியங்களை மறைத்து வருகிறது! இப்போது அங்கு அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் மாதிரி ஆட்கள் இல்லாமலேயாப் போவார்கள் ? விசயம் வெளிவரும்.


சத்குரு ஜகி வாசுதேவ் .

             ஆனால் இப்படி உலகே துரத்தி ஓடிக் கொண்டு இருக்கும் விசயத்தை கையிலாத்தில் உள்ள மானோ சரோவருக்குச் சென்ற ஈஷா அறக்கட்டளை ( ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷாவிற்குச் சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பது உலக அரங்கில் முக்கியத்துவம் மிக்கது .) நிறுவியுள்ள சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் காட்டுப்பாதயில் ஒரு மான் கூட்டத்தைப் பார்த்தேன் என்பது போல மிகச் சாதரணமாக வேற்றுலக வாசிகளைப் பார்த்ததாகவும் அவற்றின் சக்தியை உணர்ந்ததாகவும் - முதன் முறையாக இந்திய யோகிகளில் யாருமே சொல்லாத வேற்றுலக வாசிகள் பற்றிய மவுனத்தைக் கலைத்து இருக்கிறார்.

அத்தனைக்கும் ஆசைப்படு.


இந்தப் பேட்டியை (https://www.youtube.com/watch?v=Gxw13dxS4-s ) 
விஜய் டி.வியின் அத்தனைக்கும் ஆசைப்படுவில் சில வாரங்களுக்கு முன் பார்த்தேன்.அவருடைய அநுபவங்களை அவருடையை வார்த்தையில் இங்குச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன். 


அதிகாலை அல்லது பின்னிரவு 2 மணி முதல் 3 3/4 மணிவரை நேரங்களில் அவர்களைத் தான் கண்டதாகவும் ,அவர்களை நம்மைப் போலத் தனித்தனி ஜீவன்களா அல்லது தனித்தனியாகத் தெரியும் ஒன்றான ஜீவன்களா என்பது அறியாத முடியாத வகையில் கொத்துக் கொத்தாக வருகிறார்கள் அப்படியே போகிறார்கள் இம்மாதிரி ஜீவன்கள் சுலபமாக நெருங்கமாட்டார்கள் ஆனால் இவர்கள் சும்மாவே வருகிறார்கள் என அவர்களை வகைப்படுத்திப் பேசுகிறார்.


உயிர் என்ற அமைப்பு !
              
                     தோற்றத்தில் அவர்கள் வேறுபட்டவராகத் தெரிகிறார்கள் அவர்களை நம் காரண அறிவைக் கொண்டு அவர்களை முழுமையான வடிவம் கொடுக்கப் பார்த்தால் அவை முடியாது என்பவர் அப்படி அவர்களுக்கு ஒரு முழுவடிவம் கொடுத்தால் அவைகள் அப்படி இருக்காது என்கிறார் சத்குரு அப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் உயிரினத்திர்க்குப் பொதுவான உயிர் என்ற அமைப்பு ஒன்றானலும் அவர்கள் நம்மிலும் முற்றிலும் வேறுபட்ட உடலியக்கம் கொண்டவர்கள் என்பதைச் சொல்கிறார். 


வெப்பம் மிகுந்த வேற்றுலக வாசிகள் ?

அவர்களுடனானத் தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பை அவர் சொல்லும்போது முழுமையாகச் சொல்லாமல் சங்கேதமாகச் சொல்கிறார் அவர்களை வரவேற்க ஒருவரை வைத்து அதன் தலைமாட்டில் மானோசரோவரின் குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அப்படித் தொடர்பு கொண்ட போது அந்தக் குளிர் நீர்க் கொதித்ததாகவும் மீடியேட்டராக உள்ள அவரின் கையைத் தொட்டப் போது நாலடித் தள்ளி உட்கார்ந்து இருந்த தனக்கு மிகப் பெரிய வெப்பம் உணர்ந்ததாகவும் சொல்கிறார்.அதர்க்கு மேல் தனக்கு இரண்டு மாதம் தங்கும் வாய்புக் கிடைத்தால் அத்தனை ரகசியங்களும் உணர வாய்ப்பு இருப்பதாக முடிக்கிறார்.அதோடு இது மட்டுமல்ல இந்த அமைப்பின் மூலம் அழைதுச் சென்ற 160 பேர்க் குழுவினர் இந்த ஒரு புதுவிதமான சக்தியை மேலே கீழே ஓடுவதைத் தன்னுள் உணரச் செய்து ஒரு புது விதமான அநுபவத்தை அவர்களுக்குள் தந்துள்ளார் என்பது மிகச் சிறந்த விசயம் .


                     எல்லையில்லா பெருவெளியில் விஞ்ஞானம் தேடிக் கொண்டு இருக்கும் மர்ம முடிச்சுகளை -அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்ற நம் ஞானிகள் ,  அறிவியலின் பார்வையில் படுவதர்க்கு வெகு காலம் இல்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக