திங்கள், 9 ஜூன், 2014

சம்மர் கிளாஸ் பூதங்கள் !



எனது பையன் முதல் வகுப்பு படிக்கும் போது இருந்தே சம்மர் கிளாஸ் அனுப்ப ஆசை என்னை தொற்றி கொண்டு இருந்தது.விசாரித்து  சேர்ப்பதர்க்குள் ஒன்றுஅவன் விடுமறை காலம் முடிந்து விடும அல்லது அவன் நிழலை பயன்படுத்தி  என் ஆத்துக்காரி தனது தாய் வீட்டு சுற்றுலாவை ஆரம்பித்து  விடுவார் .அவர்கள் சொல்லியும் குறை இல்லை .அவனை அந்த ஆண்டாள் போல பள்ளியெழுச்சியிலிருந்து தொடங்கி ப்ராஜெக்ட் யுத்தம் தினமும்  தனியே நடத்தியே  அனுபவிக்கும் கொடுமையிலிருந்து அப்பாடா என்று ஓட கிடைக்கும் வாய்ப்பு இப்போதுதானே வருகிறது !.

               இயற்கைகும் ,பெண்களுக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு .இருவருமே  தனது இறுக்கங்களை தானே தளர்த்தி  கொள்ளும் மருத்துவம் செய்து கொள்வார்கள் ( நமக்கு நாமே திட்டம் போல ) அதில் ஒன்றுதான்  அம்மா வீட்டுக்கு தஞ்சம் புகுவது .


இந்த வருடம் மூன்றாம் வகுப்பு போகிறான் நிச்சயம் அவனை  கடத்தி  கொண்டு போவதர்க்குள் ஒரு சம்மர் கிளாஸ் பிள்ளையாரை பிடிக்க ஆசைபட்டு ,பிடித்தேன்  .(ஆனால் அது குரங்கான கதை தான் இங்கு சொல்கிறேன் !) அப்படி போன இடத்தில் அதை நடத்தும்  அவர்களுக்கு பிரதான தொழில்  பியூட்டி பார்லர் .ஆனால்   நடனம் ,செஸ் , கேரம் ,படம் வரைதல் நடத்துவது சம்மர் கிளாஸ் மட்டும் என்று சொன்னார்கள் .


        மனைவியையும் பையனும் ஏதோ பேசி செஸ்,ட்ராயிங் முடிவு பண்ண ,பதினைந்து நாள் நடக்கும் இந்த ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மணி நேரம்  என்றும் வகுப்புக்கு தலா  1500 வீதம் 3000 கட்டினோம் .இதில் சேர்க்கை கட்டணம் 500 .வழக்கம் போல இதிலும் பேரம் பேசி, என் இல்லாள் அதை இல்லாமல் செய்து விட்டார்கள்.(டிஸ்கவுண்ட் !) பதினைந்து நாள் வகுப்பு முடிந்தால் சான்று தருவீர்களா என்றதர்க்கு ஆம் என்றூம் சொன்னார்கள் .(காரணம் அவனை வேறு பள்ளிக்கு மாற்றும் நோக்கம் இருப்பதால் அது அவன் 'எக்ஸ்ட்ரா கரிகுலத்திர்க்கு' பயன்படுமே ?) 

1 ஆம் தேதி முதல் வகுப்பு ஐந்து மணிக்கு போனோம் (மாலை 5-7).ஆனால் அடுத்த நாள் வகுப்பு 3.30க்கு என்றார்கள் .ஆனால் அந்த சிறப்பு வகுப்பு எடுக்கும் பெண் தினமும் ஏறக்குறைய 4 மணிக்கு வந்தார் .அது மட்டுமல்ல 5 மணிக்கு முடித்து அனுப்பி விட்டார்கள் .காரணம் கேட்டபோது எதிபார்த்த அளவு சேர்க்கை இல்லாததால் ஒருவனுக்கே வகுப்பு எடுப்பதால் சப்ஜெக்ட்டை கவர் பண்ணி விடுகிறார்களாம் !. (அவர்கள் அப்போது சொன்னது என் சம்பள கவரை காலி பண்ணியது பற்றி போல !)


பதினைந்து நாள் வகுப்புமே இந்த நொண்டி சமாதனங்களுடன் தத்தி ,தத்தி நகர்ந்தது .வழக்கம் போல என்னுடைய இல்லாள் என் புத்தி சாலித்தனத்துக்கு ஆட்டோமீட்டருக்கு சூடு வைப்பது போல வைக்க ,பதினைந்தாம் நாள் அதை நடத்தும் பெண்ணை ஃபோனில் பிடித்து, நேரில் பர்ர்த்தால் ,அப்படியெல்லாம் வாய்ப்பு இல்லையே .என்று மறுக்க நான் விவாதத்திர்க்கு தயாரானேன் .


   ஒரு மணி நேர வகுப்பு அரை மணியாக குறைக்கப்பட்டது.செஸ் போட்டியிலும் சரி ,படம் வரைதலிலும்  நடத்தும் பாடத்தை பற்றி ’பேட்டர்ன்’ இல்லாதது .கிளாஸ் வருவதர்க்கு முன் அவனுக்கு இருந்த செஸ் நகர்த்தலில் எவ்வித பெரிய மாறுதலும் இல்லாதது பற்றி பட்டியலிட்டேன் அதோடு நீங்க்ள் எதிர்பார்த்த அளவு  சேர்க்கை இல்லாவிட்டால் வகுப்பை ரத்து செய்து இருக்கலாம் கட்டிய பணத்தை  ரீஃப்ண்ட் பண்ணி இருக்கலாமே என்றேன் .எல்லாவற்றுக்கும் கொஞ்ச நேரம் மறுத்த அந்த பெண் சரி விசாரிக்கிறேன் ஒரே வார்த்தையில் முடித்தார் .அவர்  சொன்னதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை .இதை விட பெரிய கூத்து அப்படி எடுத்த பதினைந்து நாள் பயிற்சிக்கு ஒரு சர்டிஃபிகேட் கூட தர முடியாது என சொல்லி விட்டார்கள். 


முடிவாக இனி இதை ஒரு பாடமாக வைத்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டேன்  .வீட்டில் குழந்தைகள் இன்றைய பாட திட்ட குறைபாடுகளால் வகுப்புகளிலும் .வீட்டிலும் மாறி மாறி தொடர்ந்து காயப்பட்டு ,விடுமுறை என்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் சேட்டை செய்ய, அதை பார்த்து  பொறுமை இழக்கும் பெற்றோர்களின் திண்டாட்டத்தை பயன் படுத்தி ,அவர்களை சம்மர் கிளாஸ் என்ற நாடகம் போட்டு பணம் பண்ணும் பூதங்களாக கிளம்பி வருகிறார்கள் !




         உஷாராக இல்லாவிட்டால் அடுத்த வருடம் வரும் வரை வீட்டில் செய்த தவறுக்கு அகமுடையவரிடம் (மனைவியிடம்தான் ) தினமும் பாடம் கற்று கொள்ள வேண்டிவரும் .உங்களுக்கு சம்மதமா?