வியாழன், 30 மே, 2013

போலிஸ் ,குற்றவாளி ,நாங்கள் .


 போலிஸ் ...
                                   தருமபுரி மாவட்டதில்  புற நகர் பகுதியில் அந்த பிரதான சாலையை ஒட்டி இருக்கும் மூன்று வீடுகளை குறிவைத்து  வந்த அந்த டெம்போ ட்ராவலர் வேன் மெதுவாக யார் கண்ணிலும் படாமல் ஓசை குறைத்து  நின்றது . உள்ளே இருந்து மூன்று நபர்கள் இறங்கினார்கள் .மிக சாதாரண தோற்றத்தை கொண்ட அவர்கள் உடை சுருக்கங்கள் வெகு தூர பயனத்தை அனுபவித்ததாக சொன்னது .முதல் வீடு நோட்டமிட்டபோது அது பூட்டி இருந்தது .வீட்டூக்கு வெளியே ஒரு ஆடு இவர்களை கண்டு மிரண்டு பின் வாங்கி தவித்தது .


அடுத்தவீட்டை நெருங்கினர்கள் .

ஒரு பெண் பாத்திரம் கழுவி கொண்டே , யாரு ? என்றது .

வந்தவர்களில் ஒருவர் ரவி இல்லையா ? என கேட்டு கொண்டே அந்த பெண்ணை நெருங்கினார் .

அதர்க்குள் ஒரு மூன்று வயது பெண் வீட்டுக்குள் இருந்து இவர்களை பார்த்து கொண்டே ஓடிவந்து,

அந்த பெண்ணிடம் ,யம்மா தம்பி அழறான் என்றது .

அதர்க்குள் மூன்றாவது வீட்டுக்கு நெருங்கய மூவரில் ஒருவர்  உள்ளே நோட்டமிட்டார் ..அந்த வீட்டின் அமைப்புக்கு சம்பந்தமில்லாமல் அந்த பொருள் அவர் கண்னை உறுத்தியது .
மற்ற இருவர்களையும் நோக்கி இங்கே வாருங்கள் என்று அவர் வேகமாக கையசைக்க,
 அதர்க்குள்,
அந்த பெண் வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டை நோக்கி,
அக்கா என்று ஒரு வித பயத்துடன் கூப்பிட ...
அந்த மூன்று வயது சின்ன பெண் எதுவுமே புரியாமல் அழ தொடங்கியது ...

                  வந்தவர்கள், குற்றப் புலனாய்வு துறை ( Crime Branch ) அவர்கள் தேடி வந்தது ஒரு திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ரவி என்ற   நபரை   . ஏற்கனவே அவன் பல வழக்குகளில் சம்பந்தபட்டவன் .அவர்கள் புதியதாய் ஒரு  குறிபிட்ட திருட்டு குற்றதின் குற்ற முறை மற்றும் குற்ற பின்னனி இந்த ரவியின் குற்ற பதிவுகளுடன் ஒத்து போனதால் தேடிப்போனார்கள் அங்கு .ரவி அங்கு வருவதே இல்லை என வீட்டார்கள் சொன்னார்கள் .
        ஆனால் அவர்கள் பார்த்த மூன்றாவது வீட்டு ஆள் பெயர் விசாரித்தபோது  இது வரை அவன் எந்த காவல்துறை குற்றவாளி பட்டியலில் இல்லாதவன் . அவன் வீட்டில் பார்த்தது வித்தியாசமாக உணர்ந்தது விலை உயர்ந்த வெளி நாட்டு ஒரு சுவர் கடிகாரம் .

             வந்து இருந்த காவல் துறையின் ஒரு உதவி கண்காணிப்பாளருக்கு வேறு ஒரு பழையதிருட்டு குற்றதில் காணாமல் போன பட்டியலில் இந்த விலை உயர்ந்த ஒரு சுவர் கடிகாரமும் ஒன்று என உள்ளுணர்வு சொல்லியது .காலம் நேரம் பார்க்காமல் குற்றவாளியை தேடி அலையும் தமிழ்நாட்டு காவல் துறையின் மிக பெரிய சொத்து இந்த உள்ளுணர்வுதான் .

                உடனே ,இழந்தவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது  .அப்படியானல் இந்த வழக்குக்கும் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி ரவிக்கும் இந்த புதிய நபர் சந்தோஷ் என்ற சந்தோஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பது ஒரு புதிய கோணத்தில் குற்றத்தை தேட காவல்துறைக்கு வேலை வந்தது .

             இது மேலும் ஒரு தலைவலி .தேடி வந்த குற்றவாளியும் இல்லை .ஏற்கனவே போய் கொண்டு இருக்கு தேடலில் புதிய திருப்பம் வேறு ஏற்பட்டுவிட்டது .காவல்துறை உள்ளூர் துப்பு தரும் இன்பார்மர்களிடம் இந்த வீட்டை கண்காணிக்க அறிவுறுத்திவிட்டு திரும்பியது .


குற்றவாளி ...
                               சந்தோஷ் ஒரு சோம்பேறி .ஒரு வேலையும் தொடர்ந்து செய்ய பிடிக்காது .ஆனால் கல்யாணம் ஆன மூன்று வருடத்திர்க்குள்  சாந்தி . சச்சின் என்ற இரண்டு குழந்தைகள்  .அதனால்தான் புதிய வேலைக்கு போக ஆசைப்பட்டு கார் ஓட்ட கற்று கொண்டான் சில மாதங்களாக லோக்களில் உள்ள டாடா ஏஸ் (சின்ன யானயை 0 மூலம்   சின்ன ,சின்ன வாடகை போனான் .சொற்ப வருமானம்தான் .

                அவன் மனைவிக்கு அவன் கூலி வேலைக்கு போவது மட்டும்தான் பிடித்தது .அதனால் தன் அப்பாவின் உதவியை கார் வாங்க சந்தோஷ் கேட்க சொல்லியும் மறுத்து வந்தாள் .

               ஆனால் சந்தோசுக்கு வெகு நாளாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை .இதை அவன் அண்ணனின் சொன்னான் .அவன் தன்னுடய நண்பன் ரவியிடம் சொல்ல,அதர்க்கு ரவி , சரி நம்முடன் வரட்டும் , ஒட்டும் திறமை பார்த்து ஏற்பாடு பண்ணலாம் என சொல்ல, அடுத்தவாரமே சந்தோஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் .
அவனுக்கு தேவை கார் .

              முதன் முறையாக ஆம்னி வேன் ஓட்ட கொடுத்தார்கள் .அவர்கள் சொன்ன ஊர் வரை ஓட்டி போனான் . ரவி அண்ணன் வண்டி நன்றாக ஓட்டுவதாக  பாராட்டினார் .
             ஊருக்குள் சில இடங்களில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு ,அண்ணனும், ரவியும் போய் வந்தார்கள் .திரும்ப வந்தவுடன் ,ஒரு தியேட்டருக்கு வழி கேட்டு போக சொன்னார்கள் .


மதிய நேரம் .ஒரு திரைபடம் அரங்கு போனார்கள் .
மாலை ,படம் விட்டு தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏற்கனவே போன இடத்திர்க்கு போக சொன்னார்கள்.

நீ போன் எங்களுக்கு பண்ணவேண்டாம் .நாங்கள் போன் பண்ணினால் வந்தால் போதும் அது வரை வேறு  எதாவது இடத்திர்க்கு போய் வா என்று  சொல்லி விட்டு போனார்கள் .

போகும் போது காரின் சீட்டுக்கு அடியிருந்து  ஒரு கனமான பேக்கை அண்ணன் எடுத்து கொண்டு போனான் .
அவர்கள் போவதை பார்த்து விட்டு ,எங்கு போவது தெரியாத ஊரில் யோசித்து கொண்டே சந்தோஷ் வண்டியை கிளப்பினான் ...


      போன் வந்தது .அவசரமாக பேசினார்கள் .முன்னால் சொன்ன இடத்திர்க்கு பக்கத்தில் வர சொன்னார்கள் .கையில் மேலும்   ஒரு பையுடன் ஏறினார்கள் .வேகமா ஓட்டு என்று அண்ணன் சொல்ல ,நேரே வண்டியை சேலம் விடு என்றார்கள் .அவர்கள் எதுவும் அப்புறம் பேசவில்லை .அண்னன் தூங்கிவிட்டான் .ரவி மட்டும் மெயின் ரோடு வழியாக செல்லாமல்  வழி சொல்லி கொண்டே வந்தார் .

நாங்கள் ...

     அந்த வெளி நாட்டு சுவர் கடிகாரத்திர்க்கு சொந்தகாரருக்கு நான் நண்பன் என்பதால் இதுவரை இப்படி நடந்த   இந்த மேற்கண்ட சம்பவங்களை ,திருட்டில் பிடிபட்ட மூவரில் ஒருவனான் சந்தோஷ்  காவல் துறையிடம் பிடிபட்ட பிறகு அவனுடன் இருந்த மூன்று நாட்களில் என்னிடம் சொன்னான்
   பொதுவாக இந்த மாதிரி திருட்டை தொழிலாக ஆரம்பிப்பவர்கள் எதாவது ஒரு காரணம்   சொல்கிறர்கள் .பிறகு சிக்கி கொண்டு தண்டனை அனுபவித்த பிறகு மீண்டும் வேறு வழி இல்லை என்றும்  அப்படி பட்ட முத்திரை குத்திய பிறகு, திருந்த வாய்ப்பு குறைவு என்பதாக சொல்லிகொண்டு அதையே  தொடர்கிறார்கள்..


Recovery

       இந்த வழக்கில் இப்போதைக்கு மாட்டி கொண்டவன் சந்தோஷ்.அவன் தாங்கள் திருடிய குற்றத்தை ஒப்புகொண்டு திருடிய பொருள்களை விற்ற இடங்களை! காட்டி கொடுப்பதாக காவல்துறையும்  மற்றும் திருடபட்ட  பொறுளை அடையாளம் காட்ட நாங்களும் (நண்பருக்கு துணையாக நானும்) கிளம்பினோம் ..இம்மாதிரி பொறுள் மீட்டலுக்காக  போவதர்க்கு  Recovery என்பதாக காவல்துறை சொல்கிறது


வீடியோ படம்.
         இம்மாதிரி பொறுள் மீட்டலுக்கு ( Recovery ) போகும்போது காவல்துறை  தன்னுடன் ஒரு வீடியோ படம் எடுப்பவரை கூட்டிகொண்டு போகிறது .இந்த இடத்தில் நான் வைத்து இருக்கவோ ,விற்கவோ திருடிய பொறுளை கொடுத்தேன் என்று குற்றவாளி சொல்பவரை விசாரிக்குபோது வீடியோ படம் எடுப்பதர்க்காகவாம் !


 அதிர்ச்சி !!

      சந்தோஷ் பெங்களூர் வரை, மூன்று நாட்களில் பல இடங்களை காட்டினான் .அதில் பெரும்பாலும் நகை கடைகள் என்பது அதிர்ச்சி தந்த விசயம்.
மற்றவர்கள் ப்ரோக்கர்கள் போன்ற இடைதரகர்கள் ஒத்துகொண்டவர்களிடம்  நகை பெற்றுகொள்ளபட்டு அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது .ஒத்துகொள்ளாதவர்களிடம் வழக்கு பதியபட்டது .காரணம் குற்றவாளியே நேரில் வந்து சொல்லியும்  அவர்கள் இல்லை மறுப்பதால் அதை அவர்கள் பக்கம்  நிரூபிக்க வேண்டும் என்பதால் .

குற்றவாளி்யா நான் ..
          ஒரு இடத்தில் இம்மாதிரி ஒரு விசாரணையின் போது கூட்டம் கூடி விட்டது .அந்த பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளும் மூடிவிட்டு,கடைக்காரர்கள் ( அவர்கள் சங்கம் ) ஒன்று கூடி காவல்துறையை எதிர்த்து குரல் கொடுக்க,வழக்கம்போல பத்திரிக்கை துறையும் கேள்விபட்டு ஓடிவந்து சரமாரியாக நாங்கள் இருந்த காவல்துறை வேனுக்குள் இருந்த குற்றவாளியை படம் எடுக்க முன்னேற   அப்போது வேனுக்குள் நான வேனின் சீட்டில் உட்கார்ந்து இருக்க, எனது சீட்டுக்கு பின்னால்  குற்றவாளியை மறைத்து கீழே உட்கார வைத்திருந்தார்கள் ( மற்ற காவல்துறையின பிரச்சனையை எதிர்கொள்ள வேனின்  கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றி வேனின் கதவுகள் அன்னைத்தும் பூட்டி விட்டு வெளியே இருந்தார்கள்) .போட்டோ எடுத்த பத்திரிக்கை தோழர்களிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை - அதனால் அடுத்த நாள் பத்திரிக்கையில் குற்றவாளி என்ற இடத்தில் என் படம் வேனுக்குள் இருப்பது போல வந்தது .


இழந்தவனே ஜாமீன் கொடுக்க  வேண்டும் .

          மீட்ட பொறுளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ,பிறகு ஒருநாள் நண்பரை அழைத்து ஒரு நகை மதிப்பீட்டாளர் முன் மீட்ட நகைகள் சோதிக்கப்பட்டு ( ஒருவேளை மீட்ட பிறகு மாறி இருக்கலாம் அல்லது போலி நகையே மீட்க்கபட்டு இருக்கலாம் என்பதர்காக )அந்த நகையை பெற சொந்த வீடு வைத்து இருக்கும் இரண்டு நபர்கள் நண்பருக்கு ஜாமின் கொடுத்த பிறகு நீதிமன்றம் கொடுத்தது .


        இங்கு,இது  நீண்ட பதிவாகிவிட்டதால் - சந்தோஷ் என்ற குற்றவாளியுடன் மூன்று நாட்கள் இந்த தேடலில் இருந்த போது, ஏற்பட்ட அனுபவங்களை வேறு ஒரு பதிவில் சொல்ல ஆசைப்படுகிறேன். 

செவ்வாய், 14 மே, 2013

கவிதை பருவம் ...




சில சிலிர்ப்புகள்..
                       கவிதை என்பது உணர்வா , தாக்கமா, வார்த்தைகளின் நளினமா ,என்பதை  ஆய்வு செய்யும் அளவுக்கு  அறிவு இல்லை .ஆனால் எனக்கு அந்த கவிதை நெய்யும் இயல்பு பூத்த போதெல்லாம் எனக்குள்ளே சில சிலிர்ப்புகள் நிகழும்  .அதை ஆராதிக்க மனசு பர பரக்கும் .ஆனால் அப்போதெல்லாம் கவிதையின் அர்த்தம் தேடி போகவில்லை .
எங்கோ எழுதி இருக்கிறது..
                       ஒருவேளை   ”கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது” எனும் வின்செஸ்டர் வாக்கியங்கள் படித்து விட்டோ ,கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’என்ற புதுமைப்பித்தனின் கருத்தை பின்பற்றி இருந்தாலோ இரண்டு நல்ல விசயங்கள் நடந்து இருக்கும் .ஒன்று நான் கவிதை எழுதும் வெலையை  செய்யாமல் இருந்து இருப்பேன் .அல்லது இன்னும்  சரியாக செய்து இருப்பேன்.சரி என்ன செய்ய ?பல நண்பர்கள் என்னிடம் அவஸ்தைப்பட வேண்டும் என எங்கோ எழுதி இருந்து இருக்கிறது.      
   இறைப்பணி.             
              எனது 13 வயதில் ,மார்கழி மாத காலை நேர விளக்கு பூஜை நடத்தும் வீட்டுக்கு, பக்கத்தில் உள்ள முருகன் கோவில் போவதும்,அங்குள்ள அர்ச்சகருக்கு உதவுவதும் எனக்கு பிரியமான வேலை அதாவது இறைப்பணி ஆர்வம் .மற்றபடி பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பூஜை என்பதால் ஒருவித கூச்சம் இருக்கும் .
      முதல் வரி.         
            அப்படி ஒரு நாள் பௌர்ணமி நாள் காலை வேளையில் கோவிலுக்கு போகும்போது நிலவு ஒளி என் மேல் பட்டு எனக்கு பின்னால் என்னை தொடரும் என் நிழல் ஒருவித மன பாதிப்பை ஏற்படுத்த அதை ’நிலவு மகள் உலவி வர என் கற்பனை  அவளை தழுவி வர .. என ஆரம்பித்த அந்த முதல் வரிகளை எனது இரண்டாவது சகோதரர் முதல் ரசிகராய் படித்து உற்சாகப்படுத்த அந்த இடத்தில் ஆரம்பித்தது எனது கவிதை பருவம் ..                

   கவிதைகளை தேட ..
              பாலகுமாரன் நாவல் படிக்குபோது நினைவெல்லாம் நித்யாவில் (1982) வரும் ”பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்” பாடலை அவர் கதையின் போக்கோடு மிக சுவாரஸ்யமாக கிறங்கடித்து எழுதியதை படித்தபோது, கவிதையில் இவ்வளவு  விசயம் இருக்கிறதா என வியக்கவைத்தது .(அப்போது பாலகுமாரன் சொன்னால்தான் சில விசயங்களை படிப்பேன் ) அதிலும் இனி வரும் முனிவரும் தடுமாறும் ...என்ற வரியை ஏன் புரியவில்லை அந்த வயதில் தேடி தவித்து இருக்கிறேன் .இரும்பு குதிரையில் வரும் அவரின் ”குதிரைகள் சொல்லும் வேதம்”   கவிதை சுத்தமாக புரியவில்லை .அப்போது தான் கவிதை மேல் ஒரு தேடல் துவங்கியது .பாலா எது சொன்னாலும் புரிகிறது .இந்த கவிதைகள் மட்டுமே ஏன் தள்ளி நிற்கிரது என்ற கேள்வி பல கவிதைகளை தேட சொன்னது ..



பார்த்த காட்சி..
               ஒரு முறை நண்பரின் சகோதரி பணியாற்றும் ஆங்கில பள்ளி ஒன்றில் - ஆண்டு விழா நிகழ்சிக்கு முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்த காட்சிகளை!! இரவு ஒரு மணிக்கு திரும்பி அப்படியே கவிதயா எழுதி காலையில் நண்பரிடம் காட்டும் போது என் முகத்தில் கிழித்து போட்டார் .குறைந்த ஆடைகளுடன் அங்கு நடந்த பல காட்சிகளின் விளைவுகளான என் கவிதை அப்படி தண்டனைக்கு உட்பட்டபோதுதான் சரி நாம் இனி அப்படி எழுத கூடாது என்பதையும் அதோடு நம் எழுத்து மற்ற உணர்வுகளை சென்று அடைகிறது என்பதையும் உணர்ந்தேன் .

 ஒரு படி மேலே ..
                எனது நேருஜி நினைவு பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு. அரங்க பெருமாள் பள்ளி முழுவதும் மாணவரை கவிதை போட்டிக்கு தேடும்போது அப்போது சுமார் 2000 பேர் படிக்கும் பள்ளியில் யாரும் சிக்கவிலை .எனது பெயரை யாரோ சொல்லி விட ,சரி பார்ப்போம் என ஒரு பரிசோதனை முயற்சியில் ஒத்துகொண்டேன் .காரணம் என்னை சோன்னவர் யார் என்று அவரே சொன்னார் .நான் 10 ஆவது படிக்குபோது ஒரு மனப்பாட செய்யுளை எழுதும்போது என்னை அறியாமல் சில வரிகளை சொந்தமாக எழுதிவிட்டேன் .அதை திருத்தும்போது கண்டுபிடித்து அடிப்பதர்க்கு கை நீட்ட சொன்ன ராபர்ட் தமிழாசிரியர் அப்புறம் கூப்பிட்டு பாராட்டி சென்றதோடு ,  அதை ஞாபகம் வைத்திருந்து நான் +1 படிக்குபோது அந்த போட்டிக்கு என்னை பரிந்துரை செய்திருக்கிறார் - அங்குள்ள பல ஆசிரியர்கள் அப்படித்தான் ஆசிரியராக மட்டுமில்லாமல் ஒரு படி மேலே உயர்ந்தவர்கள் .அதிலும் ஜோசப் பாபு அய்யா வகுப்பு எடுத்தால் மொத்த வகுப்புமே சிறு ஓசை இல்லாமல் கவனிக்கும் .
               
திருமதி புனிதா ஏகாம்பரம்.
               அதுவரை எந்த கவிதை போட்டியிலும் கலந்து கொண்ட அனுபவம் இல்லை என்பதால் ஒரு வித தயக்கத்துடன் கவிதை போட்டி அறைக்குள் நுழைந்தால் ,குறைந்தது  20 மாணவ மாண்வியர்கள் ஏதோ யோசித்தவண்ணம் உட்கார்ந்து இருக்க, இடம் இருந்த இடத்தில் மெல்ல நான் பதுங்கிகொண்டேன் .போட்டிக்கு தலைப்பு கொடுக்க உள்ளே வந்தவர் என்னை ஆச்சர்யபடுத்தினார் .ஆம் அவர்கள் திரு சாலமன் பாப்பயா பட்டி மன்றத்தில் அதிகம் கலந்து கொள்ளும் திருமதி புனிதா ஏகாம்பரம் அம்மையார் .அவர்கள் பேசினார்கள் ,உங்களுக்கு கொடுத்த தலைப்பு “புதியதோர் உலகம் செய்வோம் “ என்பதாகும் ,ஒருத்தர் எத்தனை புது கவிதை அல்லது மரபு கவிதை வேண்டுமானலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டு ,இதர்க்கு முன்னர் உங்களுக்கு வழங்க பட இருந்த கடினமான தலைப்பு ” ஆன்மீகமும் அறிவியலும் ”என்பது.நான்தான் மாற்றினேன் என்றார்கள் .யாரும் பேசவில்லை .ஆனால் நான் சொன்னேன், ஆன்மீகத்திலிருந்துதான் அறிவியல் வந்தது அது ஒன்றும் கஷ்டமான தலைப்பு இல்லையே என்றதும் ,என்னை உற்று பார்த்து வீட்டு எந்த பள்ளி என்று கேட்டுவிட்டு போனார்கள்.
             
     வாசலாக
           அந்த போட்டியில் இரண்டாவது பரிசு நான் .அதை மேடையில் அறிவித்த அவர்கள் இந்த கால புதுக்கவிஞர்கள் திறமைசாலிகள் எந்த தலைப்பு கொடுத்தாலும் எழுத தயாராக இருகிறார்கள் என்று பாராட்டி பேசினார்கள் அதுவும் முழுக்க ,முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் "Our Lady "  என்ற பள்ளி அது நடந்தது அதனால் .ஒரே நாளில் எங்கள் பள்ளியில் பிரசித்தம் ஆகிவிட்டேன்.அடுத்த நாள் பள்ளி அசம்பளியில் முன்னிறுத்தி பாராட்டப்பட்டேன்.  அடுத்து நடந்த பல போட்டிக்கு அந்த பரிசும் ,பாராட்டும்  வாசலாக இருந்தது .. 
           பிறகு எனது நண்பர்களின் சகோதரிகள் கல்லூரி விழாக்களுக்கு கவிதை எழுதி தர கேட்டு, வாங்கி சென்று இருக்கிறார்கள் .

         
  செல்ல குட்டு !           
         ஒரு சமயம் கலை இலக்கிய பெரும் மன்றத்தில்  அவசரமாக எழுதிய கவிதையில்...


நண்பர்களே இதுவரை 
எழுதியதும் படித்ததும் போதும்.
 அது இப்போது எதுவும் சாதிக்கவில்லை !.
என்னிடம் அரிவாள் இருக்கிறது
முடிந்தால் நீ சுத்தியலோடு 
விரைந்து வா !!
                என்று எழுதி விட்டேன். அங்கு இருந்தவர்கள் பெரும்பாலோர் கம்யூனிசவாதிகள் என்பதால் ரசித்தார்கள் .ஆனால் அப்போது அதன் செயளாலராக இருந்த திரு முத்துலக்கையன் (  என்ற என் மதிப்புக்குரியவர் அவர், ஒரு கம்யூனிச கட்சியின் கவுன்சிலர் ) சொன்னது என்னவென்றால் அவர்களும்(கம்யூனிசவாதிகள்) படித்தும் ,எழுதியும்தான் சாதித்து இருக்கிறார்கள் எனவே தோழர்( என்னை )  இன்னும் நிறைய வரலாறு படிக்கவேண்டும் என்று செல்ல குட்டு வைத்தார் .


அவர்தான் என்னை திரு.வைரமுத்து அவர்களின் இல்லத்திர்க்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தி  ’தடை கல்லை படிக்கல்லாக்கு ‘ என கையெழுத்து ஆசீர்வாதம்  வாங்கிதந்தார், என்பது முக்கியமான விசயம் . 
மார்கழி பெண்ணே அவதாரம் .!.
               பிறகு ஒரு சமயம் என் தோழி ஒருத்திக்கு ஒரு படைப்பு தர வேண்டும் என்ற ஆர்வத்தில் ”மார்கழி பெண்ணே” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு அப்போது (டைப்பிங்)  தட்டச்சு வெளியிட்டேன் .அதில் ஒரு வித்தியாசம் செய்தேன் .உண்மையான திருப்பாவை நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான் ( கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்) என்பதாக முதல் பாடலின் கடைசி வரிகள் முடியும்  ஆனால் நான் அதை மாற்றி அதே நாராயணன் இந்த ஆண்டாளூக்காக ஏங்கி தவித்து பாடுவது போல படைக்க ( லேசாக ஜொள் மாதிரி யோசிக்க தோனுமே).அதை பிரதி எடுத்த தட்டச்சு பெண்ணே எனக்கு தெரியாமல் சில பிரதிகளை சுட்டு விட்டது .அந்த மார்கழி பெண்ணே  சில கல்லூரி பேராசிரியைகளால் பாராட்ட பட்டாள் ..

போதி மர  நிழல் !
              காலத்தை திரும்பி பார்த்தால் கவிதை எழுதும் எனது பழக்கம் பல  சமயம் எனது உணர்வுகளின் வடிகாலாக இருந்திருக்கிறது .என் கோபத்தை ,சந்தோசத்தை ,துக்கத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை வளர்த்து  ஒரு போதி மர  நிழல் தோழனாக வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை வாழ்க்கையின் கால் தடங்களாக தொடர்கிறது ....அற்புதம்தானே !!..

வியாழன், 9 மே, 2013

ஒரு பெண்.எத்தனை திருப்பங்கள் ?

பெண் பார்க்க ..

                பொதுவாக முதல் முறையாக பெண் பார்க்க போவது என்பது ஒரு இனம் புரியாத உற்சாகமான விசயம் அதிலும் நண்பனின் சகோதரருக்கு பார்க்க போவது இரட்டிப்பு உற்சாகம் .நமக்கு அங்கு பொறுப்பேதும் இல்லை என்பதால் அங்கு நடக்கும் சகல விசயத்திலும் முடிந்தவரை ஓட்டு, ஓட்டு என்று ஓட்டலாம் .இன்னும் சொல்ல போனால் நண்பனின் குடும்பம் என்னை அந்த பெண் பார்க்கும் படலத்திர்க்கு கூட்டிகொண்டு போவதர்க்கு முக்கிய காரணம் என்னுடய சுபாவம் .முன் பின் அறிமுகம் இல்லாவிட்டாலும் எளிதில் ஒட்டி கொள்ளும் அந்த என் சுபாவம்  .


இயக்கம் + நடிப்பு ..

இங்கு இன்னொரு முக்கியமான ’த்ரில்’என்னவென்றால் நாங்கள் பெண் பார்க்க மட்டும் போகவில்லை .அங்கிருந்து பெண்ணுக்கே சொல்லாமல் நண்பரின் வீட்டுக்கு அழைத்து வந்து அங்கும் நண்பனின் சகோதரருக்கு தெரியாமல் அவருக்கு எதேச்சையாய் பார்க்க வைத்து , பிடித்தால் மேற்கொண்டு தொடரலாம் என்பதே எங்களின் - பெண் பார்க்கும் நாடகம் .இதர்க்கு உதவி - எனது நண்பனின் இன்னொரு சகோதரரின் மனைவி . அவருடந்தான்  திருச்சி அரசு மருத்துவமனையில்  நர்சிங் பயிற்சியில் இருக்கிறர் நாங்கள் தேடிப்போகும் உமா என்ற உமாமஹேஸ்வரி  .இந்த நாடக அங்கத்தினர்கள் - நண்பன் அவரின் ,அண்ணன் ,அவரின் மனைவி .இயக்கம் + நடிப்பு - சாட்சாத் நானே .


ஆர்வமில்லாமல் சோளம்..
பெண்ணின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் இருந்தது .அந்த கிராமம் நோக்கி அண்ணன் , அண்ணி , நான் நண்பன் நாழ்வரும்  போனோம் ..சில பஸ்கள் மட்டுமே வந்து போகும் அந்த ஊருக்கு நடந்து போவதே நல்லது என நடக்க ஆரம்பிக்க ...வழியில் ஒரு தரைப்பாலம். பெரிதாய் தண்ணி இல்லை .சில வயல்களில் மட்டும் சோளம் ஆர்வமில்லாமல்  அசைந்து கொண்டு இருந்தது .இப்போது இருப்பது போல- ஏப்ரல் மாதத்தில் நாங்கள் போனதால் நடவு எதுவும்  இல்லை என்று தெரிந்து கொண்டோம் .மற்றபடி அங்கொரு தோட்டத்திலும் இங்கொரு தோட்டத்திலுமாக அறுவடை போக மீதி நிற்க்கும் ஊடு பயிர்கள் முறைத்து கொண்டு இருந்தன . 


 முகம் சுழிக்காமல்..!
மிக பெரிய அறிமுக படலத்திர்க்கு பின்னர் நாங்கள் உமாவின் அம்மாவிடம் அனுமதி பெற்று பிற்பகல் வரவேண்டிய பஸ் வராததால் மீண்டும் நடந்து அதே தரைபாலம் ,சோளம்,முறைத்து கொண்டு இருந்த ஊடு பயிர்கள் கடந்து ,பிரதான சாலையிலிருந்து பஸ் பயனம் தொடங்கினோம் .வழக்கம் போல சிரிப்பு பட்டாசை கொளுத்த , நண்பனும் இணைந்து கொள்ள ,நாங்கள் அடித்த லூட்டியில் பஸ் பயனிகள் முகம் சுழிக்காமல் பல சமயம் வேடிக்கை பார்த்தனர். !! 


நாடகத்தின் கிளைமேக்ஸ்..
நண்பன் வீட்டில் அம்மா ,அப்பா ,சகலருக்கும் பிடித்து போனதால் ,அண்ணன் வரவுக்காக காத்து இருந்தோம்.அதாவது  எங்கள் நாட்கத்தின் கிளைமேக்சுக்காக !.வந்தார் ,பார்த்தார் , போகும்போது இது படித்த பெண் மாதிரி தெரியுது அவனுக்கே (என் நண்பனுக்கே) பாருங்கள் என்று ஒரு குண்டை மிக சர்வ சாதாரணமாக போட்டுவிட்டு போய்விட்டார் .இந்த நாடகத்தின் கிளைமேக்ஸ்- இயக்குனரான எனக்கே தெரியாமல் போய்விட்டது . ஆனால் இதில் இன்னொரு திருப்பமும் இருந்தது .அந்த பெண் போகும்போது அண்ணியிடம் எனது நண்பனை மிகவும் விசாரித்து விட்டு சென்றதாம் .போச்சுடா !


வில்லன்..அல்ல வில்லி ..

பிறகு வீட்டில் பேசும்போது இந்த விசயம் நண்பனுக்கு தெரியவரவே அவன் தனக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக நினைத்து பழக்கம் தொடர ,இருவருக்குமிடையே  மிக ஆழமான காதல் வேரூண்றியது. அண்ணனுக்கு பிறகு பேசி முடிக்கலாம் என வீட்டில் பேசிக்கொண்டார்கள் .நண்பன் உற்சாகமா காதலை மேலும் தொடர ,ஒரு கட்டத்தில் நண்பனுக்கு பாண்டிச்சேரிக்கு வேலை கிடைத்து போக, ஒரு சின்ன தொய்வு காதலில் வந்தது .பொதுவாகவே காதல் என்று வந்தால் அதர்க்கு வில்லன் வேண்டுமே .அதுவும் நடந்தது .


காதல் தோல்வி..
அந்த பெண்ணின் அம்மாவுக்கு ஒரு தம்பி ( தாய் மாமன் ) இருந்தான் .அவன் இந்த பெண்வீட்டில் பெண்ணின் அம்மாவை தவிர வேறு யாருக்கும் பிடிக்காது .காரணம்  கை நிறைய பணம் சம்பாதிப்பது காரணம் இல்லை . கூடவே சின்ன வயது அளவு மீறிய குடி .இதனால் யாரும் பெண் தர மறுக்க தம்பி பாசத்தில் அக்கா லேசாக தன் மகளின் காதல் தெரிந்தும் தம்பியை திருமணம் செய்ய  தூண்ட ,நண்பனின் சந்திப்பு இடைவெளியை பயன்படுத்திகொள்ள ஒரு கட்டத்தில் அந்த பெண் நண்பனிடம் மன்னிப்பு கேட்டு தன் அம்மாவின் கட்டாயத்தையும் ,தன் வீட்டின் வருமையையும் காரணம் காட்டி காதல் விவாகாரத்து கோர - நண்பனின்அண்ணியும் இதில் தலையிட முடியவில்லை ,காரணம் அந்த வீட்டின் வறுமை + உறவின் அழுத்தம் =காதல் தோல்வி .

அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் .நண்பனின் அண்ணியுடன் தொடர்பு இருந்ததால், எனக்கு இதெல்லாம் தெரியும் .  நண்பன் ஓரளவுக்கு இதெல்லாம் புரிந்து கொண்டு காதலில் இருந்து விடுபெற சில ஆண்டுகள் ஆகிவிட்டது. .பாண்டிசேரி வேலையும் தொடர விருப்பமில்லாமல் மீண்டும் திண்டுக்கல் வேலை . 


எங்கிருந்தாலும் வாழ்க ! 
                                     அதர்க்கு சில வருடம் கழித்து   நண்பனுக்கும் திருமணம்  ஆகி ஒரு குழந்தை ஆன பிறகு மீண்டும்  ஒரு நாள் உமாவிடமிருந்து போன் நண்பனுக்கு வந்தது .தனது கணவருக்கு இரண்டு சிறு நீரகங்களும் செயல் இழந்து விட்டதாகவும் தயவு செய்து உதவுமாறூம் கேட்க , எங்கிருந்தாலும் வாழ்க என்பது போல நண்பனும் உதவ தயாராக ,அப்புறம்தான் சட்ட சிக்கல்தடை செய்தது . இப்போது உள்ள நடைமுறைப்படி திருமணம் ஆகி இருந்தால் மனைவியிடமும் கையெழுத்து வேண்டும் .அதை கேட்க, அவர்கள் மறுத்து களேபரம் ஆகிவிட்டது .


எக்சேஞ்.. 



               வேறு வழியில்லததால் அந்த பெண் (எக்சேஞ் அடிப்படையில்) அவள் கணவனுக்கு  ஒரு டோனர் ஒரு சிறு நீரகம்  கொடுக்க அதே போல் கொடுத்த டோனரின்  உறவுக்கு இந்த பெண் ஒரு சிறுநீரகம் கொடுத்து இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .


வெள்ளி, 3 மே, 2013

ஆயுள் இல்லாத காப்பீடு



நீங்கள் அதிருஷ்டசாலியா ?

                சட்டென யாரிடமிருந்தும் இல்லை என்று பதில்வராது .இருந்திருக்கலாமே என்று தசாவதாரம் கமல் மாதிரி பதி சொல்ல ஆசைப்படுவோம் .அதே சமயம் எந்த வித ஜாதகமும் பார்காமல் ,காசு வாங்காமல் நீங்கள்  அதிருஷ்டசாலி என்று யாராவது அதுவும் மொபைல் ஃபோனில் கூப்பிட்டு ,திருப்பூர் டெலிபோன் டைரெக்டரியில் 1000 எண்களை குலுக்கி (?) போட்டதில் 100 அதிருஷ்டசாலி தேர்ந்தெடுத்தோம் அதில் நீங்களும் ஒருத்தர் அதனால் உங்களை எங்கள் செலவில் மூன்று இரவு இரண்டு பகல் தங்கி பார்த்து வர கோவா சுற்றுலா அழைத்துசெல்ல போகிறோம் என்பதாக இந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும்  உலக வங்கி வரிசையில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும் இருக்கும்  அப்படிபட்ட இடதிலிருந்து வரும்போது எப்படி நான்  அதிருஷ்டசாலி இல்லை என்று நம்பிகொள்ள ? ஆனால் கூடவே அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது .ஆனால் இயற்கை விதி ..


              வேறு சொந்த வேலை காரணமாக அன்று போக முடியவில்லை . அடுத்த நாள் நான் 60 கி.மீ தொலைவில் இருக்கும் ஊருக்கு போய்இவிட்டேன். போனில் அழைத்த பெண் மீண்டும் அழைக்க அவர்கள் சொன்ன இடத்தை தேடிப்போனோம் ( குடும்பதோடு வரவேண்டும் என்பதாகவும் சொல்லப்பட்டு இருந்தது ).வரவேற்று உள்ளே அழைத்து சென்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் இந்தியாவில் அந்த வங்கியின் 13 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் இப்படி ஒரு அதிருஷ்ட வாய்ப்பை தந்து இருக்கிறோம் என்பதாகவும் , விளம்பரங்களுக்கு கொடுக்கும் அந்த செலவை மக்களுக்கு இந்த மாதிரி சுற்றுலா மூலம் செலவு செய்து எங்கள் விளம்பரதை செய்கிறோம் என்று கூடுதலாக காரணம் சொன்னார்.பிறகு எனது வருமானம்,வங்கி கணக்கு ,வீடு ,குழந்தை , வங்கி சேமிப்பு ,எனது கல்யாணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதா காதல்கல்யாணமா என்ற கேள்விகூடவ கடைசியாக என்னுடைய காப்பீடு பற்றி கேட்டார்கள் ( அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது மீண்டும்..ஆனால்..)


                பேசிமுடித்தவுடன் வேறு ஒருவர் உங்களை சந்திப்பார் அவர் சில விசயங்களை பகிர்ந்து கொள்வார் என்று அழைத்துவந்தார் அவர் அந்த குறிப்பிட்ட வங்கியின் சீருடை அணிந்து இருந்தார் .எங்களின் ஃப்ராடக்ட் ஒன்று இருக்கிறது கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால், அது பற்றி பேசலாம் இன்று ஒரு நாள்மட்டும் அந்த வாய்ப்பை உங்களுக்கு தருகிறோம் என்றும் நாளை இந்த வாய்ப்பு இல்லை என்றும் கூலாக சொன்னார்கள் .சரி பேசலாம் என்று சொன்னோம் ..கோவா கூட்டிட்டு போறாங்க கேட்டுட்டுதான் போவோமே ....
           

 இது  ஒரு மணி பேக் பாலிஸி .குறிப்பிட்ட வயதுக்கு இவ்வளவு தொகை பிரிமியம் . முதல் ஆண்டு முழு பிரிமியம் 13600/- தொகை செலுத்தவேண்டும். அடுத்த் ஆண்டு அதை பிரித்து முதல் பகுதி தொகை கட்டி விட்டு உங்கள் பாலிஸி தொகையின் மதிப்பில் 80 % எந்தவித கியாரண்டியும் இல்லாமல் லோன் தருவோம். அதை ஆறு வருடத்தில் எப்போது வேண்டுமானலும் செலுத்தலாம் .,நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை 20 % போனஸ் பதினாறு அல்லது இருபத்தி நான்கு  வருடத்திர்க்கு பிறகு நீங்கள் செலுத்தும் தொகையைவிட இரு மடங்கு பெற்றுக்கொள்ளலாம்.அதர்க்கு பிறகு இந்திய சராசரி ஆயுள் 85 வரை காப்பீடு .ஷேர் மார்க்கெட் முதலீடு இல்லாததும் இதர்க்கு ஏஜெண்ட் என்று யாரும் இல்லை என்பதாலும் முழுமையான உங்கள் தொகை காப்பீடாக மாறுகிறது என்றும் இன்னும் பல ..மேலும்  வருடம் ஒரு முறை இந்தியாவின் ஏதாவது ஒரு முக்கிய நகருக்கு இதே மாதிரி எங்கள் முழு செலவில் பயனம்..  


              அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்று ஏனோ சொல்லவில்லை .மனைவியை கேட்டேன்.உங்களால் முடிந்தால் கட்டுங்கள் ( எப்படி ? ) ஆனா எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்கள் அடஅட (எண்ட அம்மே )  குடும்பதோடு  ஏன் வரவேண்டும் என  சொன்னார்கள் என்பதை மிக சரியாக அப்போது புரிந்துகொண்டேன்.  சரி என்று சொன்னதுமே சில இடங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு கூடவே எங்களுடன் முதலில் பேசியவர் வீடுவரை வந்து காசோலையை சேகரித்து கொண்டு பறந்தார் .(ஒருவேளை நாங்கள் மனசு மாறிவிட்டால் !)


             காப்பீடு எடுத்து ”பாண்ட் “ ஒருவாரத்தில் ஒழுங்காக வந்தது அதில் ஏஜண்ட் என்பதாக ஒரு பெயர் இருந்தது. ”பாண்ட் “வந்து விட்டதா என உறுதி செய்ய போன் வந்தது .ஆனால் மூன்று மாதம் ஆகியும் சுற்றுலாவிர்க்கான எந்த ஒரு அழைப்போ அதர்க்கான பேச்சோ வரவில்லை .ஆனால் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் என் மனைவி போன் வந்ததா என கேட்க்கும் போது அடப்பாவிகளா இப்படி ஏமாந்துட்டேனே என்று யாரிடமாவது கத்தணும்போல  ஒரு வேகம் பிறக்கும் ...