புதன், 8 ஆகஸ்ட், 2012

முதல் தகவல் !


காலையில் 2008 ஆம் ஆண்டிற்கான கணக்கில் டாக்ஸ் கட்டவில்லை என்ற வருமான வரித்துறையின் துரித ! நடவடிக்கையில் எங்களுக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆடிட்டர் ஆபீஸ் போனபோது காலை 9:30 .வழக்கம் போல மெதுவாக வந்து அதற்கான கடிதத்தை தயார் செய்து கொண்டு இருந்த போது ...
அந்த அலுவலகத்தில் பஸ்ஸில் வந்து பணிபுரியும் நபர் ஒருத்தர் வந்ததும் வராதுமாக TEA PUBLIC School பஸ் விபத்து ஆகிவிட்டது .ஆறு குழந்தைகள் இறந்து விட்டார்களாம் என்று ஒரு குண்டை போட .
அப்போதுதான் பணிக்கு வந்த அனைவரும் உறைந்துபோனார்கள் .நான் இதில் இன்னொரு மோசமான விஷயம் .அந்த ஆடிட்டர் ஆபீஸ் தலைமை ஆடிட்டர் குழந்தைகளும் அந்த பள்ளிதான் .

நான் விசயத்தைஅறிந்துகொள்ள வீட்டில் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து விவரம் கேட்டால் .அப்படி இல்லை என்று சொன்னார்கள் .இங்குதான் நான் தப்பின் ஆட்டத்தை தொடங்கினேன் ஆர்வகோளாறால் ! கம்பனி பாஸுக்கு தெரிந்தவர்கள் பலர் படிப்பதால் ,அவரிடம் அப்படியே நான் கேள்விப்பட்ட மாதிரி சொல்லிவிட்டேன் .அவர் அப்போது நடந்த மீட்டிங்கை ரத்து செய்து இதை விசாரிக்க ...
அடிபட்டது உண்மைதான் .ஆனால் ஒருசிலருக்கு காயம் மற்றபடி ஒன்றுமில்லை இந்தமாதிரி  தப்பான தகவலை தரகூடாது என்று கண்டித்து போனை துண்டித்தார் .

கூட்டத்தில் அடிபட்டுகிடப்பதை வேடிக்கை பார்க்கும்   புத்தியும் ,எந்த தகவலையும் ஆராயாமல் அப்படியே எடுத்துகொள்ளும் மோசமான புத்தியும்  இனிமேல் என் வாழ்கையில் நடக்கவே கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன் .

ஒருவேளை  இந்த பள்ளியில் படிக்கும் பெற்றோருக்கு நேரடியாக தெரிந்து இருந்தால் எத்தனை துயருக்கு ஆளாகி இருப்பார்கள் .
எனவே எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் ...திருவள்ளுவர் தாத்தா படம் என்னை முறைப்பது போல பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக