சனி, 25 ஆகஸ்ட், 2012

செக்ஸ் வைரஸ் வரமா ?


அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னிடம் இன்டர்நெட்டில் வரும் தகவல்களை பரிமாறுவதும் ,விசாரிப்பதும் வழக்கம் .இன்றைய நாளில் அறிவு கிணறாக தேட தேட அனுமார் வால் போல தேடல் நீண்டுகொண்டே போகிறது .
                                                              அதிலும்  இன்று நம் தமிழ் மக்கள் வலைபூவில் பதியும் விசயங்களின் அளவுக்கு முன்னாள்  நூலகங்கள் கைகட்டி நிற்கவேண்டும்  அவ்வளவு சிறப்பான இலவச தொகுப்புகள் .தேடித்துருவி மெனக்கெட்டு பதிகிறார்கள் .ஒரு புதிய விஷயம் பற்றி தெரிந்த  அன்றைய நாளின் மாலையே .இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்திலே .

                                                       இத்தனை இருந்தும் என்ன செய்வது திருப்பூரில் பதினான்கு வருடம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் சக அலுவலக தோழர் .ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு புதியவர் .ஒருநாள் ஒரு வெப் முகவரி கொண்டு கொண்டு வந்தார் .அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து தர சொன்னார் .அவருக்கு சுமார் 52 வயது .அவர் கணினியுடன் சுமார் பலவருடம் அனுபவம் உள்ளவர் ஆனால் இண்டர்நெட்டை பற்றி சற்றும் அறியாதவர்.

அவர்கொடுத்த முகவரி  alongporn .com என்று பெயர் இருந்ததால் எனக்கு அந்த முகவரி பெயரிலும் அவரின் வயதின் பெயரிலும் இருந்த நம்பிக்கையில் (அது மட்டுமல்ல நம்மையும் உதவி கேட்கிறார்களே என்ற சற்று கர்வம் இயல்புதானே ?) தொடுப்பை தொடர்ந்தாள் இப்போது அதிகம் பரவி இருக்கும் SHEMALE வகை வீடியோ தொகுப்பு அது .

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .(கர்வத்தின் பரிசு கிடைத்துவிட்டது ) அவரிடம் சொன்னேன் .சார் நாம் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்க தூண்டி வைரஸ் வரத்தை பெற்றுக்கொண்டால் நம் அலுவலக கம்ப்யூட்டர் (Lan Connection )முழுவதும் பரவி விடும் அப்புறம் ஒருநாள் எல்லா டேட்டாக்களும் புட்டுக்கும் என எடுத்து சொல்லி சமாளித்தேன் .எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்த பலரும் இப்படி ஆசையில் தேட போனபின்தான் நிறைய திறமையை வளர்த்துகொண்டார்கள் என்பது வேறு செய்தி .

மேலே நான் சொன்னபடி மாய்ந்து மாய்ந்து என்னை மாறி ஆட்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் தேடல் இன்னும் இப்படியே இருக்கே ? சலிக்காதா ?

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கொஞ்சலை வீட்டில் வைத்துகொள்ளுங்கள் ..


மன்னிக்கவும் .தலைப்பு குழந்தைகளை பற்றி ..
எனது செல்ல புதல்வனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு செல்லுவது வழக்கம் .அதே போல மாலை பள்ளி விட்டபின் அழைத்து வருவதும் .தினமும் பல லாஜிக் இல்லாத விசயங்களை  பார்க்கிறேன்.

ஒன்று .
               பள்ளிக்கு அளித்து வரவேண்டிய பிள்ளையுடன் அதற்கு இளைய வீட்டில் இருக்கும் பிள்ளையையும் முன் பக்கம் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது .அனேகமாக அந்த பிள்ளைகள் சுமார் மூன்று வயதிற்கு கீழே இருக்கும் சரியாக உட்கார கூட பழகாத நிலையில் அழைத்து வருகிறார்கள் .அது மட்டுமல்ல பள்ளிக்கு விட வேண்டிய பிள்ளையை ஏற்கனவே லேட்டாக அழைத்து வரும் அவஸ்தையில், இந்த பிஞ்சு குழந்தைகளை முன்பக்கம் வைத்து கொண்டு ஏற்கனவே ரிப்பன் போல இருக்கும் திருப்பூர் சாலையை விளக்குமாற்று குச்சியைபோல சிறிதாக்கி வழக்கமாக சாலையில் செல்லுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள் .

      நண்பர் ஒருவரிடம் இப்படி அழைத்து வரும்போது கேட்டதற்கு ,எங்க சார் வண்டியை எடுத்தவுடன் நமக்கு முன்னாலே அது ரெடியாகி அழுக ஆராம்பித்து விடுகிறது என்று பெருமையாக சொன்னார் .அதுமட்டுமில்லையாம் இவர் அலுவலகம் செல்லும் முன் ஒரு ரவுண்டாவது வீதியில் அழைத்து செல்ல வேண்டுமாம் .
                       இப்படி செல்லுவர்களை காணும்போது சற்று எரிச்சல் மட்டுமே வருகிறது .சின்ன குழைந்தைகள் இதெல்லாம் அறியமாட்டார்கள் நாம்தான் மெல்ல சொல்லி வீட்டில் விட்டு வரவேண்டும் .இப்படி உண்மையிலேயே பாசம் உள்ள அப்பன்மார்களாக இருந்தால் பேசாமல் லீவு போட்டு விட்டு வீட்டில் வைத்து நாள் முழுவதும் கொஞ்சினால் யாரும் கேட்கவா போகிறார்கள் ?
இரண்டு .
                     பள்ளி விடும் முன் வந்து அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் இதில் பெரும்பாலும் பெண்களும் இருக்கிறார்கள் .என்னவோ பாசத்தை காத்து கூட்டிப்போவது மாதிரி தெரியும் .ஆனால் சாலையில் உள்ள பம்பாய் மிட்டாய் வாங்கித்தர சொல்லி அழும் பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள இப்படி நோய பரப்பும் பொருள்களை பள்ளியின் வாசலில் இரண்டு பக்கமும் நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்களை பள்ளி நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது.
மூன்று.
                    பள்ளியில் ,பெற்றோர்கள் கூட்டம் போடுவார்கள் .அதிகம் பட்சம் நாங்கள் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே பள்ளி நடத்துவதாக சொல்கிறார்கள் .ஆனால் பெரும்பாலும் அடுத்த கட்டண உயர்வை பற்றி மட்டுமே இருக்கிறது .சரி .ஆட்சியாளர்கள் இந்த கட்டண உயர்வை கண்டுகொள்வதில்லை என்பதால் அதை விடுவோம் .ஆனால் அந்த கூட்டங்களை ,பெற்றோர்களும் அந்த பிள்ளைகளின் வகுப்பு  ஆசிரியர்களையும் கூட்டத்திற்கு அழைத்து பிள்ளைகளின் உடை ,எடுத்துவரும் உணவு முறை ,ஆரோக்கியம் ,விடுமுறையில் பெற்றோர்கள் எந்த மாதிரி புது விசயத்தை பழக்க படுத்தவேண்டும் என்பதில் துளி கூட அக்கறை செலுத்துவதில்லை .ஆசிரியர்களும் ,பெற்றோகளும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதே குழந்தைகளின் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு நல்லது .

இதெல்லாம் ஒரேநாளில் நடந்து விடாது ஆனால் வருங்காலத்தில் பெற்றோகள் சும்மா இருக்கபோவதில்லை ...

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கற்பு ..


அழகான ஆணாதிக்க வார்த்தை
பெண்ணுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய அம்பு ..
 பெண்ணை மட்டுமே உண்ணும் முதலை ..


                                 இப்படியெல்லாம் எழுத ஆசை ஆனால் அதிகம் படிப்பறிவு இல்லாததால் நான் குரோமோசோம் கட்சி . ( தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது ) எனவே தலைப்பை பற்றி உண்மையில் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அருமையான வலைப்பூவை பாருங்கள் http://thangathamiz.blogspot.in/2008/08/blog-post_5109.html
             சில வருடங்களுக்கு முன் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் .அங்கே பகல் - இரவு மிக சாதாரணம் எனவே ஆண்கள் பெண்கள் நிறைய சேர்ந்து வேலை பார்ப்பதால் அங்கு ஒருவரை பற்றி ஒருவர் கட்டாயமாக ஒரு ஈர்ப்பு இருந்தது .சில வயதில் சில ஈர்ப்பு மாதிரி .அங்கு எனக்கு தொடர்புடைய ஒரு நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது . விசாரித்தேன் ..ஒப்புக்கொண்டான் .ஆனால் அவனைப்பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் மேல் பாதிப்பில்லாமல் கல்யாணமான பெண்களிடம் அவன் வலை வீசுவதில் கில்லாடி .இதை பற்றி நாங்கள் பலமுறை கண்டித்ததால் கம்பனியில் எங்களுக்கு கொடுத்த ரூமைகூட காலிசெய்துவிட்டு வெளியே தங்கி கொண்டான் .( அது கூட வேறு காரணம் சொன்னார்கள் ) ஊரில் உள்ள அவன் குடும்பம் வரை எனக்கு பழக்கம் .இருந்ததால் .வேறு வழியில்லை பேசிக்கொள்வோம் .எனக்கு அந்த பெண்ணை பற்றி கவலை தொற்றிக்கொண்டது.

     ஒரு நாள்  நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த பெண்ணையும் ,நண்பனை பற்றியும் சொன்னார் .உங்கள் நண்பனும் அந்தபெண்ணும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிமாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் மேய்கிற ஆட்கள் .இதுக எப்படி குடும்பம் பண்ணபோகிறதோ என்று அங்கலாய்த்தார் .இதுபற்றி நான் அவனின் மேல் உள்ள அக்கரையில் அவனுக்கு மிகவும் நெருங்கிய அதே சமயம் நல்ல  புத்திசாலி நண்பர் மூலமாக அவனுக்கு அறிவுரை சொல்ல அனுப்பினேன் .அவன் சொன்ன பதிலை கேட்டபோது  "நான் சந்தோசப்பட்டேன் .
அது "நானும் ராமனில்லை அவளும் சீதையாக எப்படி எதிர்ப்பாபது "
இருவருக்கும் திருமணம் ஆகி அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள்

             பல்வேறு காரணங்கள் காரணமாக வேலையே விட்டுவிட்டுஅவர்கள் சொந்த ஊருக்கு போன பிறகு மீண்டும் திரும்பி இருவரும் எங்கள் கம்பனிக்கே பழைய பணிக்கு தொடர ..( கையில் காசும் , கண்டிப்பை விரும்பாதவகளுக்கு சொந்த ஊர் முடியாது ) சரி இப்போது பையன் பழையமாதிரி இருக்கமாட்டான் என நினைத்தால் கொஞ்ச நாளில் மீண்டும் அவன் வேலையை தொடங்கிவிட்டான் ..அந்த பெண்ணும் ...      இதில்  ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் விசயம் இவனுக்கு தெரியாது .ஆனால் இவன் விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியும் .

ஒருநாள் இவன் அறிந்தபோது வீட்டுக்குள் அடிதடி  ரகளை .நீ யோக்கியமா ? என அந்த பெண் கேட்டதால் .
எனக்கு கோபம் வந்து விட்டது நேரில் சென்று என்னடா அப்போ கேட்டப்ப பெரிசா வசனம் பேசின இப்ப அதெல்லாம் எங்க போச்சு என்ற போது மிக சாதரணமாக சொன்னான் .அது பொம்பள பிள்ளை, நாளைக்கு பொறக்க  போகிற குழைந்தைக்கு நான்மட்டுந்தான் அப்பனா இருக்கணும்னு ஆசைப்படறேன் ...
எனக்கு பேச எதுவுமே  இல்லை என தோன்றியது .அப்படியானால் இவனோடு தொடர்பினால் எங்கோ பிறந்த குழைந்தைகளுக்காக எப்போது வருந்துவான் ?

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”

சனி, 11 ஆகஸ்ட், 2012

அந்த பெண்ணுடன்...

                 ண்பர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்று அவரை மாப்பிள்ளை பார்க்க பெண்வீட்டார் வருவதற்காக காத்திருந்தோம் .நண்பர் தன்னுடைய வீட்டை மிகவும் மாற்றி அமைத்து இருந்தார் .சுமார் மூன்று மணிநேரம் அவரின தந்தையுடன் சேர்ந்து சமையலறை தவிர அவர் வீட்டில் வரவேற்பறை ,முதல் மாடியில் காற்று கூத்தாடும் மற்றும் ஒரு அறை இருக்கிறது .அங்கு பூ தொட்டிகள் கொடிகள் அலங்கரிக்க அருமையாக இருக்கும அத்தனையும் மிக அழகாக நேர்த்தியாக ஒதுக்கி வைக்கபட்டு இருந்தது .
                  அதில்லாமல் மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே நண்பரின் அறை .அங்கு அவரி கம்ப்யூட்டர் மற்றும் இரவு மட்டும் தங்குமாறு வைத்துகொண்டார் .அங்கு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை .இங்கு யாரையும்  அழைக்கபோவதில்லை என்று பதில் வந்தது .
             
     மதியம் ஒன்று முப்பதுக்கு பெண்வீட்டார்கள் வருவதாகவும் ,சம்மதம் தெரிவிக்கும் வரை ஒருவர் வீட்டில் ஒருவர் கைநனைக்க மாட்டார்கள் என்பதால் பார்த்து, பர்ர்த்து ஸ்னாக்ஸ் வாங்கினோம் .பப்ஸ் - Delifersh பாதாம்பால் - ஆவின் தாயாரிப்பு .ரசகுல்லா வீட்டில் ஏற்கனவே தயாரிக்க பட்டு இருக்க .இதோடு மல்லிகை பூ .. முதல் முறையாக நண்பர் வீட்டுக்கு மாப்பிளை பார்க்க வருபவர்கள் இவர்கள் என்பதால் போதுமா போதுமா என்று ஏற்பாடு கச்சைகட்டி பறந்தது ..

          சொன்னபடி ஒன்று முப்பதுக்கு வரவேண்டிய பெண்வீட்டார்கள் ,மிக சரியாக நான்கு மணிக்கு வந்தார்கள் .ஆனால் ஒரு ஆச்சர்யம் பெண்ணுடைய பெற்றோர்கள் மாறும் சில உறவினர்கள் சேர்த்து மொத்தம் வருபவர்கள் ஏழு பேர்கள்  எதிர்பார்க்க பட்டது ஆனால், வந்தவர்கள் வித்தியாசமாக பெண்ணையும்  உடன் அழைத்து வந்திருந்தனர் ( ஏற்கனவே பெண்வீட்டிற்கு மாப்பிளை போயிருந்ததால் இதை நாங்கள் மட்டுமல்ல இதற்கு ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்கவில்லை )
நான் பெண்ணின் தந்தைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் எப்போதெல்லாம் அவர்களின் பேச்சில் மத்தியில் மவுனம் அரங்கேறுமோ அப்போதெல்லாம் நான் உள்ளேன் அய்யா என்பது போல ஒரு சில வார்த்தைகளை ஆரம்பிப்பேன் ...( இதை என் தார்மீக கடமையாக கொண்டேன் .)
 பெண்ணுடன் வந்த சில பெண்கள் ஏதோ கிசுகிசுக்க சரி கோவையிலிருந்து திருப்பூர் பயணம் என்பதால் பாத்ரூம் போக போகிறார்கள் என நினைத்தோம் .அது மேலே முதல் மாடியில் இருக்கிறது .எனவே அங்குதான் போவார்கள் என நினைத்து கொண்டு இருந்தபோது கீழேயுள்ள நண்பரின் ( மாப்பிளை ) அறைக்கு போக .. அங்கிருந்து ஒரு குட்டி பெண்ணையும் அக்கா உங்களையும் கூப்பிடுகிறார்கள் என அழைத்து  செல்ல எனக்கு அப்போது அவர்களை தொடர்ந்து  நண்பர் அதிரடியாக் பின்னாலேயே சரசரவென பாய எனக்கு ஒன்றுமே புரியவில்லை .

சுமார் கால் மணிநேரம் ஆன பிறகு எல்லோரும் திரும்பிவந்த  நண்பரின் முகத்தில் சின்ன கலவரம் ..
அவர்கள் வழக்கம்போல போயசொல்லியனுவதாக சொல்லிவிட்டு செல்ல நண்பரை வெளியே அழைத்து சென்றுவிட்டு கேட்டால் ,அதிரடியாக் பின்னாலேயே சென்ற காரணம் .அவர் வீட்டில் அவருக்கு முன்னாலேயே ஒரு பெண் பார்த்திருந்தார்கள் .இந்த மாதிரி அவர்கள் வீடு வரவில்லை. வேறு சில காரணங்களால் அது தடைபட்டு விட்டது .அந்த பெண்ணுடன் இருந்த பழைய போட்டோகளை Desk Top ல் ஒரு Folder போட்டு பத்திரமாக  வைத்திருக்க அதை மறைக்க ஓடியிருக்கிறார் ..அது சரி .!

புதன், 8 ஆகஸ்ட், 2012

முதல் தகவல் !


காலையில் 2008 ஆம் ஆண்டிற்கான கணக்கில் டாக்ஸ் கட்டவில்லை என்ற வருமான வரித்துறையின் துரித ! நடவடிக்கையில் எங்களுக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆடிட்டர் ஆபீஸ் போனபோது காலை 9:30 .வழக்கம் போல மெதுவாக வந்து அதற்கான கடிதத்தை தயார் செய்து கொண்டு இருந்த போது ...
அந்த அலுவலகத்தில் பஸ்ஸில் வந்து பணிபுரியும் நபர் ஒருத்தர் வந்ததும் வராதுமாக TEA PUBLIC School பஸ் விபத்து ஆகிவிட்டது .ஆறு குழந்தைகள் இறந்து விட்டார்களாம் என்று ஒரு குண்டை போட .
அப்போதுதான் பணிக்கு வந்த அனைவரும் உறைந்துபோனார்கள் .நான் இதில் இன்னொரு மோசமான விஷயம் .அந்த ஆடிட்டர் ஆபீஸ் தலைமை ஆடிட்டர் குழந்தைகளும் அந்த பள்ளிதான் .

நான் விசயத்தைஅறிந்துகொள்ள வீட்டில் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து விவரம் கேட்டால் .அப்படி இல்லை என்று சொன்னார்கள் .இங்குதான் நான் தப்பின் ஆட்டத்தை தொடங்கினேன் ஆர்வகோளாறால் ! கம்பனி பாஸுக்கு தெரிந்தவர்கள் பலர் படிப்பதால் ,அவரிடம் அப்படியே நான் கேள்விப்பட்ட மாதிரி சொல்லிவிட்டேன் .அவர் அப்போது நடந்த மீட்டிங்கை ரத்து செய்து இதை விசாரிக்க ...
அடிபட்டது உண்மைதான் .ஆனால் ஒருசிலருக்கு காயம் மற்றபடி ஒன்றுமில்லை இந்தமாதிரி  தப்பான தகவலை தரகூடாது என்று கண்டித்து போனை துண்டித்தார் .

கூட்டத்தில் அடிபட்டுகிடப்பதை வேடிக்கை பார்க்கும்   புத்தியும் ,எந்த தகவலையும் ஆராயாமல் அப்படியே எடுத்துகொள்ளும் மோசமான புத்தியும்  இனிமேல் என் வாழ்கையில் நடக்கவே கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன் .

ஒருவேளை  இந்த பள்ளியில் படிக்கும் பெற்றோருக்கு நேரடியாக தெரிந்து இருந்தால் எத்தனை துயருக்கு ஆளாகி இருப்பார்கள் .
எனவே எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் ...திருவள்ளுவர் தாத்தா படம் என்னை முறைப்பது போல பட்டது .

புதன், 1 ஆகஸ்ட், 2012

உடைந்த இதயத்துடன்

நேற்று இரவு ஏழுமணிக்கு கம்பெனி ஸ்டாப்ஸ் பேசிக்கொண்டு இருந்தபோது ,பேச்சுவாக்கில் நாளை கம்பனி பாஸ் பிறந்த நாள் பற்றி பேசினோம் .இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக ஏதாவது பண்ணலாமா  என்று கேள்வி எழுந்த போது எல்லாரும் என் வேலையை காலிபண்ணும் நோக்கத்தில் வில்லங்கத்தனமான ஐடியா கொடுத்தார்கள .

ஒருவர் மட்டும் சற்று சற்று வித்தியாசமாக நாம் காலையில் சார் வந்தவுடன் பரிசு கொடுப்போம் .மாலை அவர் தரும் பார்ட்டியில் கலந்து கொள்வோம் என்று பேசினோம் .நிச்சயமாய் SKC பார்ட்டிதான் கொடுப்பார் .வேறு புஸ்ஸ் ..

இதில் வழக்கம்போல பணம் அதாவது ஐடியா சரிதான் பரிசுக்கு பணம் ?
நிறைய பேர் கேட்டவுடன் அடுத்த கம்பனி ஆர்டர் பற்றி சம்பந்தம் இல்லாமல் பேசுவது போல பேசிவிட்டு எஸ் ஆகிவிட்டார்கள் !

வழக்கம்போல யார்முதல் பேசினோமோ அவர்களே எப்படி அங்கும் இங்கும் பேசி பணம் திரட்டி ஒருவரை அனுப்பி பரிசை தேர்வு செய்ய அனுப்ப அவர் பட்ஜெட்டை மனசில் வைத்து பல கடை ஏறிவிட்டு மூன்று டிபார்ட்மெண்டுக்கு ஒவ்வொரு  பரிசாக மூன்று பரிசு வாங்கிவிட்டார் .

பார்ட்டி ...
முதல் டிபார்ட்மென்ட் பரிசு - பரிசை பிரித்த பாஸ் சந்தோசப்பட்டார் .ஒரு ரோபோ கடிகாரத்தை ஏந்திய மாதிரி .
அடுத்து ,அடுத்த டிபார்ட்மென்ட் பரிசு-இரண்டு புறாக்கள் ஒரு குழந்தையை காப்பது போல அதுவும் பிடித்துபோக ..

எங்கள் முறை வந்தது...
 பெரிய கவர்  பிரிக்க மேலே ஒட்டியிருந்த பள ,பள கவரை பிரிக்க போராடி பிரிக்கும்போது டம ,டம சத்தம் உள்ளுக்குள் கேட்க்க .எங்களுக்கு லேசாய் பயம் அது ஒரு பெரிய பறக்கும் விமானம் மினியேச்சர் ...ஒரு வழியாய்
அதன இறக்கை,மற்றும் பாயில்ஸ் முன்புறம் இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் அத்தனையும் தனித்தனி பாகங்களை சேர்த்து பார்க்கும்போது ஏற்கனவே டம ,டம விசயத்தில் உடைந்தது அழாகான அந்த இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் (பேன்ஸ் )அவுட் ! உடைந்து விட்டது .

அவர் பெருந்தன்மையாய் கண்டுகொள்ளவே இல்லை .ஆனால் ஏற்பாடு பண்ணிய எங்கள்  தொகுதியிலே கள்ள வோட்டு என்பது போல ஆகிவிட்டது .மெல்ல அசடு வழிய ...நாங்கள் ஒருவரை பார்த்துக்கொண்டோம் ..

இனிமேல் இந்தமாதிரி நூதனமான பாகன்களை கொண்ட பரிசை யாருக்கும் கொடுக்கவே கூடாது சாமி .கொடுத்துவிட்டு அசடு வழிந்து அள்ளிகொள்ளவும் வேண்டாம் என்று போனில் பேசிக்கொண்டோம் .
.உடைந்த இதயத்துடன் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் என்று இந்த சரித்திரம் எங்களை பேசலாம் !