செவ்வாய், 31 ஜூலை, 2012

அவஸ்தை

ஒரு விசயத்தை உருப்படியா செய்ய தெரியாம ஆரமபத்திலேயே சொதப்பி முதல் கோணலை ஏற்படுத்திய அனுபவம் .

வீட்டுக்கு மதியம் சாப்பிட போகும்போது லோக்கல் சேனலில் மொழி மாற்ற படம் போட்டு இருந்தார்கள் .நான் பார்க்காத படம். அதுவும் மொழிமாற்றம் பண்ணிய சைனீஸ் படம் .பெயரும் தெரியாது .

முழுப்படம் பார்க்கவில்லை .ஒரு ஆற்றில் தோணி ஓட்டுகிறான் ஒருவன் .அவனுக்கு மூலிகை சேகரித்து அதை வயித்தியம் செய்வது பழக்கம் .இந்த நிலையில் ஒரு மலைமேல் மூலிகை பறிக்கும்போது தவறி ஆற்றில் விழுகிறான் .விழுந்தவனை கடல் மச்சகன்னி போல ஒருத்தி வாய் வழியாக மூச்சை செலுத்தி காப்பாற்றுகிறாள் ..அப்புறம் அவள் அவனை தேடி வருகிறாள் .கதை அப்புறமாய் போகிறது ....

ஆனால்  விஷயம் அதுவல்ல அப்படி அந்த லோக்கல் லோக்கல் சேனலில் அது திருடப்பட்ட வெப் அட்ரஸ் தெரிந்தது .சரி ஆபீசில் ஒரு மேடம் இந்த மொழிபெயர்ப்பு படங்களை  மிக உசத்தியாக பேசுவார்கள் சரி அவர்களுக்கு போன்  பண்ணி சொன்னேன் .அந்த முகவரி சொன்னேன் .

இங்கு நான பண்ணிய தப்பு அதை நான் சோதித்து  சொல்லியிருக்க வேண்டும் .நான் கொடுத்த முகவரி எதார்த்தமாக இருந்தது . எனவே போனில் சொல்லிவிட்டேன்  .அப்புறம் சில பேங்க் வேலை .மறந்தே விட்டேன் .

நான் ஆபிஸ் வந்தபோது அவர்கள் இல்லை .மறந்துவிட்டேன் .ஆனால் இந்த பதிவுக்கு சில மணி நேரத்திற்கு முன்னாள் போனில் அழைத்து எவன் சார் இந்த அட்ரஸ்  உங்களுக்கு கொடுத்தான் என்ற போதுதான் எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது .நமக்குத்தான் நல்ல பெயர் நாம் செய்ததாகவும் கெட்டது செய்தால் முகம் தெரியாத எவனையாவது இழுத்து விட்டுருவேமே ?ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து ,நான் அந்த முகவரியை இன்டர்நெட்டில் தேடிப்பார்த்தால் அடபாவிகளா ?

அத்தனையும் நீலப்பட விவகாரங்கள் .நான் மட்டும் பார்த்திருந்தால் ஒருவேளை சந்தோசப்பட்டு இருப்பேன் .ஆனால் இப்போ மானம்,மரியாதை கப்பலேற்றிவிட்டேனே ?இது என் தப்புதான் ஆனா யோசிச்சு பாருங்கள் .திருட்டுமசாலா என்பது ஒரு தப்பாகா இருக்குமுன்னு என்னால தப்பாக நினைக்க முடியலே !

ஒரு வேளை உங்களுக்கு இப்படி அவஸ்தை ஏற்பட்டு இருக்கா ?

திங்கள், 30 ஜூலை, 2012

வம்பு பேசலாம் !


பொதுவாக எழுதுகிற கையும், ________________ நிற்காது என்கிற பழமை உண்டு .நானும் விதி விலக்கல்ல ! எனக்கு தெரிந்ததில் ஆரம்பித்து தேடுகின்ற பொது என்னை இடறியது பல நல்ல விசயங்கள் .

பரீட்சைக்கு படிக்கும்போது எதையாவது மனப்பாடம் செய்யலாம் என்கிறபோது கவிதை வரும் நல்ல விளம்பரம் காதில் விழும் அதை நோக்கி மனம் நகரும் ..அது போல நான் தெரிந்த பார்முலா 1 போட்டிகளை எழுத தொடங்கினேன் ( Logic ).அப்புறம் கொஞ்சம் கவிதை போல சில வரிகளை பதிவிட்டேன்( Romance ) ஆனாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டே இருந்தது


அது அன்றாட நிகழ்வுகள் ...இன்னைக்கு காலையில் சன் தொ.கா வழங்கும் வாங்க பேசலாம் எனக்கு வம்பு பேசலாம் என்பதாக பட்டது .பாரதி பாஸ்கர் அஸ்ஸாமில் ஒரு பெண்ணை இருபது காட்டுமிராண்டிகள் அசிங்கபடுத்தியதை தவறு என்பதாக சொல்லும்போது ராஜா அந்த பெண்ணுக்கு, அதுவும் +1 படிக்கிற பெண்ணுக்கு குடிக்கிற இடத்தில என்ன  வேளை? என்று கேட்க்க நீங்கள் தவறை விட்டுவிட்டு அதற்க்கு தண்டனை தருவதை விட்டுவிட்டு அந்தப்பெண் அங்கு என்ன வேலை என்கிறீர்கள் இது தப்பு என்று என்று வம்பு பேசுமாறு ஆகிவிட்டது .இருவருக்குள்ளும் உள்ள அந்த பட்டிமன்ற புத்தி விசயத்தை வேறுபக்கம் இழுத்து விட்டது .

அது போல திருப்பூரில் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவர்களை நூறு அடிதள்ளி நின்று கொண்டு அதுவும்  ஏதாவது மூலை ஒன்றில் நின்று கொண்டு வாய் ஊத சொல்லும் அபத்தம் போல !

 பையனின் பள்ளிகூடத்தில் பெற்றோர்கள் மீட்டிங் கூப்பிட்டு நமக்காக பேசுவதுபோல ஆரம்பித்து அடுத்த கட்டணத்தை கூட்டும் குண்டை போடுவது 

இது  போல பல  இடறிய விசயன்களை பேசலாமா ..